சில்லறை வர்த்தகத் துறையில் 2,500 பணிகள்

சில்லறை வர்த்தகத் துறையில் 2,500 பணிகள்

2 mins read
d3b3f5c1-2499-495f-8b7f-a4ae1c30d461
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யால் சிங்­கப்­பூ­ரின் சில்­லறை வர்த்­த­கத் துறை வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும், கடை­கள் படிப்­ப­டி­யா­கத் திறப்­ப­தா­லும் பல நிறு­வ­னங்­கள் மின் வர்த்­த­கத்­தின் பக்­கம் திரும்பி­இருப்­ப­தா­லும் இத்­து­றை­யில் ஏறத்­தாழ 2,500 வேலை வாய்ப்­பு­கள் உருவாகி உள்ளன.

இந்த வேலை வாய்ப்­பு­களில் ஐந்­தில் இரண்டு நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­ப வல்லுநர்கள் ஆகி­யோ­ருக்­கா­னவை என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தமது வாராந்­திர வேலை நில­வர அறிக்­கை­யில் நேற்று தெரி­வித்­தார்.

$2,750லிருந்து $6,500 வரை மாத சம்­ப­ளம் வழங்கக்கூடிய வர்த்­தக, சந்­தைப்­ப­டுத்­து­தல், வர்த்­தக மேம்­பாட்டு வேலை­கள் உள்­ளன.

வர்த்­தக, மொத்­த­ வி­யா­பார மேலா­ளர்­கள் மாதத்­துக்கு $2,000லிருந்து $3,750 வரை சம்­ப­ளம் பெறு­வது வழக்­கம்.

$2,400லிருந்து $4,450 வரை மாத சம்­ப­ளம் ஈட்டக்கூடிய வர்த்­தக மற்­றும் சந்­தைப்­ப­டுத்­து­தல் விற்­பனை நிர்­வா­கப் பணி­களும் உள்­ளன.

இவற்­றைத் தவிர்த்து கடை விற்­பனை அதி­கா­ரி­கள் போன்ற வேலை­களும் உள்­ளன. இது­போன்ற வேலை­க­ளைச் செய்­வோர் பொது­வாக மாதத்­துக்கு $1,400லிருந்து $1,900 வரை சம்­ப­ளம் பெறு­கின்­ற­னர்.

சில்­லறை வர்த்­த­கத் துறை­யில் முன்­னிலை ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­வ­தால் இந்த வேலை­கள் அவ­சி­ய­மா­னவை என்று அமைச்­சர் டியோ கூறி­னார்.

அதே சம­யத்­தில், மின் வர்த்­தக முறை­யைக் கையாள தீர்­மா­னித்­துள்ள நிறு­வ­னங்­கள், மின்­னி­லக்­கத் திறன்­க­ளைக் கொண்ட நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­ப வல்லுநர்கள் ஆகி­யோ­ரைத் தேடு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

வேலை­கள் மட்­டு­மின்றி கிட்­டத்­தட்ட 610 பயிற்­சித் திட்­டங்­க­ளும் வேலை அனு­ப­வப் பயிற்­சி­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன. மேலும் ஏறத்­தாழ 430 பயிற்­சித் திட்­டங்­களும் உள்­ளன.

கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து செப்­டம்­பர் மாதம் வரை சில்­லறை வர்த்­த­கத் துறை­யில் 770 பேர் வேலையிலும் பயிற்­சித் திட்­டங்­கள், வேலை அனு­ப­வப் பயிற்­சி­களிலும் சேர்க்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது.

இவர்­களில் 700 பேர் வேலை பெற்றனர் அல்­லது இருக்­கும் வேலை­யைத் தக்­க­வைத்­துக்­கொண்­ட­னர்.