வீட்டிலிருந்து வேலை செய்ய அல்லது நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பத்தில் எட்டு பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் ஏறத்தாழ 1,800 பேர் பங்கெடுத்தனர்.
முழுநேரமாக அலுவலகத்துக்குத் திரும்ப ஆய்வில் பங்கெடுத்த பத்தில் ஒருவர் மட்டுமே விருப்பம் தெரிவித்தார்.
அலுவலகங்களுக்குக் கூடுதல் ஊழியர்கள் திரும்பலாம் என்று கடந்த மாதம் 28ஆம் தேதியன்று அரசாங்கம் அறிவித்ததற்கு முன்பே வேலையிடம் திரும்பிவிட்டதாக எஞ்சியிருப்போர் தெரிவித்தனர்.
வேலையிடத்துக்குத் திரும்பியிருப்பவர்களில் பெரும்பாலானோர் அலுவலகத்துக்குச் செல்லவும் அதன்பிறகு வீடு திரும்பவும் பயணம் செய்ய வேண்டியிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வேலையிடச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் அவர்கள்
அக்கறை தெரிவித்தனர். கொரோனா கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்து குறித்து அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
கொவிட்-19 ஆபத்து இருக்கும் நிலையில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது, மக்கள் கூட்டம் ஆகியவை தாங்கள் எதிர்நோக்கும் மிகக் கடுமையான சவால்கள் என்று வேலையிடத்துக்குத் திரும்பியுள்ள பலர் கூறினர்.
முகக்கவசம் அணிந்துகொண்டு வேலை செய்வது அசௌகரியமாக இருப்பதாகவும் வேலையில் ஒழுங்காகக் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் ஆய்வில் பங்கெடுத்த பத்தில் மூவர் தெரிவித்தனர்.
சில நாட்கள் அலுவலகத்திலும் சில நாட்கள் வீட்டிலிருந்தும் வேலை செய்ய பத்தில் நால்வர் விருப்பம் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தொடர அதைவிட சற்று அதிகமானோர் விரும்புகின்றனர்.