சிங்கப்பூரில் 2018ல் பக்கவாதம் கூடியது: 8,300 பேர் சிகிச்சை பெற்றனர்

சிங்கப்பூரில் 2018ல் பக்கவாதம் கூடியது: 8,300 பேர் சிகிச்சை பெற்றனர்

2 mins read
a73bcd63-ee9d-431f-a1b1-e964568fc5f2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2017ல் பாதிக்கப்பட்டவர்களைவிட 5% அதிகம் என பதிவகம் தகவல்

சிங்­கப்­பூ­ரில் கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 8,300 பேர் பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்டு பொது மருத்து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இந்த எண்­ணிக்கை 2017ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 5 விழுக்­காடு அதி­கம் என்று சிங்கப்பூர் பக்­க­வாத பதி­க­வத்­தின் ஆகப் புதிய புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

உல­க­ள­வில் பார்க்­கை­யில் 25க்கும் அதிக வய­துள்ள மக்­களில் நான்கு பேரில் ஏறக்­கு­றைய ஒரு­வர் தன் வாழ்­நா­ளில் ஏதாவது ஒரு கட்­டத்­தில் பக்­க­வா­தத்தை அனுப விப்பதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இருந்­தா­லும் பக்­க­வாத நோயை 80 விழுக்­காடு அள­வுக்­குத் தவிர்த்துக்கொள்ள முடி­யும் என்­றும் இதற்கு வாழ்க்­கை­ப்பா­ணி­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்­து­கொண்­டாலே போது­மா­னது என்­றும் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

வாதத்­திற்­கான அறி­கு­றி­களை முன்­ன­தா­கவே உணர்ந்­து­கொண்­டால் உட­ன­டி­யா­கச் சிகிச்சை அளித்து குணப்­ப­டுத்­தி­விட முடி­யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்­கப்­பூ­ரில் பக்­க­வா­தம் பற்­றிய புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும் அந்த நோயை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து தவிர்த்­துக் கொள்­வ­தற்­கா­க­வும் இந்த மாதம் பக்­க­வாத மேம்­பாட்­டுச் சேவைக் குழு பல இடங்­க­ளுக்­கும் செல்­லும். குடி­மக்­க­ளுக்குக் கடி­தங்­களை அனுப்­பும். சமூக ஊட­கத்­தில் பல­ரை­யும் எட்­டு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொள்­ளும்.

இந்­தக் குழுவை 2014ல் சுகா­தார அமைச்சு அமைத்­தது. பக்­க­வாத நோய் பரா­ம­ரிப்பை மேம்­படுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்­து­வ­தற்­கும் மேற்­பார்­வை­யி­டு­வ­தற்­கும் தோதாக இந்­தக் குழு அமைந்­தது.

முகத்­தில் சோர்வு, கை, கால்கள் பல­வீ­ன­ம­டை­வது, பேசு­வ­தற்­குச் சிர­மம் போன்­றவை பக்­க­வா­தத்­திற்­கான அறி­கு­றி­க­ளா­கும்.

இத்­த­கைய அறி­கு­றி­கள் தென்­பட்­டால், அவை இலே­சாக இருந்­தா­லும் உட­ன­டி­யா­கச் சிகிச்­சையை நாட­வேண்­டும்.

ஆகை­யால் பக்­க­வா­தம் தொடர்­பான போத­னை­கள் தொட­ர­வேண்­டும் என்று இந்­தக் குழு­வின் தலை­வ­ரும் தேசிய நரம்­பி­யல் கழ­கத்­தின் மூத்த ஆலோ­சனை வல்லு­ந­ரு­மான டெய்ட்ரி டி சில்வா குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கார­ண­மாக மக்களை எட்­டும் முயற்­சி­கள் பாது­காப்பு இடை­வெ­ளி­யு­டன் இடம்­பெறும். இந்த ஆண்­டில் இணை­யத்­தில் ஒரு­மித்த கவ­ன­மும் செலுத்­தப்­படும் என்­றும் இந்­தக் குழு அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

பக்கவாதம், அதைத் தடுப்பதற்கான தகவல்கள் எல்லாம் சிறார்களுக்கும் போதிக்கப்படுகிறது. அவர்கள் வீடுகளில் உள்ள முதி யோருக்கு அத்தகைய தகவல் களைப் புரியவைத்து உதவ முடியும்.

பக்கவாதம் தடுப்புக்கான மூன்று மாத கால இயக்கம் பற்றிய தகவல்களை Spot Stroke Facebook என்ற பக்கத்தில் தெரிந்துகொள்ள லாம்.