ஐந்து புதிய கொவிட்-19 சம்பவங்கள்; ஊழியர் விடுதிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தொற்று இல்லை

ஐந்து புதிய கொவிட்-19 சம்பவங்கள்; ஊழியர் விடுதிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தொற்று இல்லை

1 mins read
2e2b16f4-d56e-4b94-8031-2fb9cd420095
-

சிங்கப்பூரில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனோ கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்நாட்டின் மொத்த கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை 57,889க்கு கூடியுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் இருவர் சமூகத்தில் இருப்பவர்கள். நேற்று போலவே இன்றும் புதிய நோயாளிகளில் எவரும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை.

சிங்கப்பூருக்கு வெளியே கிருமித்தொற்றுக்கு உள்ளாகி இங்கு வந்திருக்கும் மூன்று பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.