கொவிட்-19 கொள்ளை நோயால் பல அனைத்துலகப் போட்டிகள் மெய்நிகராக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு இன்று தெரிவித்தது. இருப்பினும், அப்போட்டிகளில் சிங்கப்பூர் மாணவர்கள் தொடர்ந்து சிறந்து விளங்குவதாகக் கூறப்படுகிறது.
உயிரியல், வேதியியல், கணிதம், தகவலியல் ஆகியவற்றின் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் மாணவக் குழுக்கள் மொத்தம் 4 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்று குவித்தன.
இவ்வெற்றிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டிருந்தார்.
“இச்சாதனைகள் மூலம் நம் மாணவர்கள் தங்களின் விருப்பங்களை மேலும் ஒரு படி கொண்டு செல்ல ஊக்கம் பெறுவர். தாங்கள் ஆர்வம் கொண்ட துறையைப் பற்றி கற்றுக்கொள்வதில் ஓர் உன்னத நிலையை அடைய பாடுபடுவர்,” என்று பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.