எச்சில் உமிழ்ந்து, "கொரோனா கொரோனா" என்று கூச்சலிட்டு சிறைக்கு சென்றவர் மீண்டும் சிறையில்

எச்சில் உமிழ்ந்து, "கொரோனா கொரோனா" என்று கூச்சலிட்டு சிறைக்கு சென்றவர் மீண்டும் சிறையில்

1 mins read

ஹோட்­டல் தரை­மேல் எச்­சில் உமிழ்ந்­த­து­டன், "கொரோனா, கொரோனா" என்று கத்­தி­ய­தற்­காக 52 வயது ஜஸ்­விந்­தர் சிங் மேஹர் சிங், இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் சிறைக்­குச் சென்­றார். அதைத் தொடர்ந்து மீண்­டும் குற்­றம் புரிந்­த­தால் ஜஸ்­விந்­த­ருக்கு நேற்று 20 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பாது­கா­வல் அதி­காரி ஒரு­வரை நோக்­கித் தகாத வார்த்­தை­களும் இன­வா­தக் கருத்­து­களும் கூறி­ய­து­டன் அந்த அதி­கா­ரி­யின் உணர்வு­க­ளைச் சம­ய­ரீ­தி­யாக ஜஸ்­விந்­தர் தாக்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

மன­ந­லக் கழ­கத்­தின் பரி­சோ­த­னை­யில் ஜஸ்­விந்­த­ருக்கு சமூக விரோ­தப் பண்­பும் மது­பா­னப் புழக்­கத்­தால் ஏற்­பட்ட கோளா­று­களும் இருப்­பது தெரி­ய­வந்­தது.

மது­பா­னம் குடித்­து­விட்டு சன்­டெக் சிட்டி பேரங்­கா­டிக்கு ஜூன் 28ஆம் தேதி காலை 11 மணி­ய­ள­வில் சென்­றி­ருந்த ஜஸ்­விந்­தர், அங்கு பிற­ருக்­குத் தொல்லை தரும் வகை­யில் நடந்­து­கொண்­டார்.

இத­னால் 31 வயது பாது­கா­வல் அதி­காரி, ஜஸ்­விந்­த­ரி­டம் சென்று பேச்சு கொடுத்­த­தில் அவர் மது­பா­னம் குடித்­தி­ருக்­கி­றார் என்­பதை உணர்ந்தார்.

இடத்தை விட்டு போகு­மாறு அறி­வு­றுத்­திய பாது­கா­வல் அதி­காரி­யி­டம் ஜஸ்­விந்­தர் தகாத வார்த்­தை­க­ளைக் கூறி­னார். பின், ஒரு டாக்­சி­யில் ஏறிச் சென்ற ஜஸ்­விந்­தர் மீண்­டும் அதே டாக்­சி­யில் சன்­டெக் சிட்­டிக்­குத் திரும்­பி­னார். அத்­து­டன் நக­ரும் டாக்சியிலி­ருந்து ஒரு கண்­ணாடி புட்­டியை ஜஸ்­விந்­தர் தூக்கி எறிந்­தார்.

டாக்­சி­யி­லி­ருந்து இறங்கி மீண்­டும் மது­பா­னம் குடித்­துக்­கொண்­டி­ருந்த ஜஸ்­விந்­தரை நோக்கி இரு போலிஸ் அதி­கா­ரி­கள் வந்­த­னர்.கூச்­ச­லிட்ட ஜஸ்­விந்­தரை அதி­காரி­கள் பின்­னர் கைது செய்­த­னர்.