அமைச்சிடமிருந்து $29,000 கையாடியவருக்கு 4 மாத சிறை

அமைச்சிடமிருந்து $29,000 கையாடியவருக்கு 4 மாத சிறை

1 mins read
7b7d835f-55f2-4fee-ba02-1b719dad9fa7
-

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சி­ட­மி­ருந்து 29,410 வெள்­ளி­யைக் கையாட, தான் வேலை செய்த மாணவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தின் உரி­மை­யா­ள­ருக்கு உத­வி­னார் 50 வயது தல்­ஜிட் கோர் யிந்­தர் சிங். பொய்­யான தக­வல்­க­ளைக் கொண்ட ஆவ­ணங்­களை அமைச்­சி­டம் சமர்ப்­பித்த குற்­றச்­சாட்டை நேற்று ஒப்­புக்­கொண்ட தல்­ஜிட்­டுக்கு நான்கு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆவ­ணங்­களில் இருந்த தக­வல்­க­ளைக் கொண்டு அமைச்சு தொடர்ந்து 12 பிள்­ளை­க­ளுக்­கான மானி­யத் தொகை­யைப் பரா­ம­ரிப்பு நிலையத்­திற்கு வழங்கி வந்­தது.

ஆனால் 'மாண­வர் பரா­ம­ரிப்­புக் கட்­டண உதவித்' திட்­டத்­தின் கீழ் இருப்­ப­தா­கக் கூறப்­பட்ட அந்த 12 பிள்­ளை­களும் அந்த குறிப்­பிட்ட கால­கட்­டத்­தில் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­னர்.

வெளி­யே­றிய தக­வலை முறைப்­படி தல்­ஜிட் அமைச்­சி­டம் தெரி­வித்­தி­ருக்க வேண்­டும்.

மானி­யத் தொகையை வழங்­கு­வதை அமைச்சு உடனே நிறுத்தியிருக்கும். ஆனால் அவர் அவ்வாறு தெரிவிக்கவில்லை.