சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 15) நண்பகல் நிலவரப்படி புதிதாக மூவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,892 ஆகியுள்ளது.
உள்ளூர் சமூகத்தில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் விடுதிவாசி ஒருவர், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருவர் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
நேற்று பதிவான 2 உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்களில் மாணவர்கள் இருவர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. ஒருவர் 13 வயது சிறுவன், மற்றவர் 10 வயது சிறுவன். இருவரும் அக்டோபர் 2ஆம் தேதி பள்ளிகளுக்குச் சென்றனர். இருவரும் அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.
இங்கிலாந்திலிருந்து திரும்பிய சிங்கப்பூரர், குறுகிய கால வருகை அனுமதியுடன் ரஷ்யாவிலிருந்து வந்தவர், இந்தியாவிலிருந்து வந்த மாணவர் அனுமதி அட்டையுடைய ஒருவர் ஆகிய மூவருக்கும் நேற்று கிருமித்தொற்று பதிவானது.
ரோச்சர் வட்டாரத்தில் இருக்கும் Hi Five இந்திய முஸ்லிம் உணவகத்துக்கு கொரோனா தொற்று நோயாளிகள் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 38.1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.08 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.