20ஆம் தேதி முதல் நூலகங்களில் வாசிக்கலாம்; நேர வரம்பு அதிகரிப்பு

20ஆம் தேதி முதல் நூலகங்களில் வாசிக்கலாம்; நேர வரம்பு அதிகரிப்பு

1 mins read
afd31308-508e-471d-b88c-a6330f03e036
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இம்­மா­தம் 20ஆம் தேதி­யில் இருந்து பொது நூல­கங்­களில் அமர்ந்து படிக்­க­வும் நாளி­தழ்­களை வாசிக்­க­வும் முடி­யும்.

இருக்­கை­களும் மின்­நா­ளி­தழ்­கள் மற்­றும் பல்­லூ­டக நிலை­யங்­கள் உள்­ளிட்ட வாசிப்­புப் பகு­தி­களும் திறந்­து­வி­டப்­படும் என்று தேசிய நூலக வாரி­யம் நேற்று ஓர் அறிக்கை மூல­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

அதே வேளை­யில், குறிப்­பிட்ட நேரத்­திற்கு மட்­டும் அனு­மதி, பாது­காப்பு இடை­வெளி விதி­முறை­கள் ஆகி­யவை நடப்­பில் இருக்­கும்.

இப்­போ­துள்ள 30 நிமிட நேர வரம்பு, ஜூரோங், தெம்­ப­னிஸ், உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கங்­களில் மூன்று மணி நேரம் வரை­யும் மற்ற பொது நூல­கங்­களில் இரண்டு மணி நேர­மா­க­வும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள வாசிப்புக் கூடம் திறந்துவிடப்படும்.

நூல­கங்­களில் பொது நிகழ்ச்சி­களும் படிப்­ப­டி­யாக மீண்­டும் தொடங்­கப்­படும். நூலக வாரி­யத்­தின் 'கோ லைப்­ரரி' இணை­யப் பக்­கத்­தில் அந்த நிகழ்ச்­சி­கள் குறித்த விவ­ரங்­க­ளைக் காண­லாம்.