குழந்தைகளுக்குத் தகாத மருந்து கொடுத்த பராமரிப்பாளர் குற்றவாளி என தீர்ப்பு

குழந்தைகளுக்குத் தகாத மருந்து கொடுத்த பராமரிப்பாளர் குற்றவாளி என தீர்ப்பு

2 mins read
f9980991-ce57-4c59-9c4e-7f1ac8100e82
தூக்கமின்மை, பதற்றம் நீங்க உட்கொள்ளப்படும் மருந்தைக் குழந்தைகளுக்குத் தந்த சாடியா ஜமாரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தமது பரா­ம­ரிப்­பின்­கீழ் இருந்த இரண்டு பெண் குழந்­தை­க­ளுக்­குத் தகாத மருந்து கொடுத்து உயி­ருக்கு ஆபத்து விளை­வித்­த­தாக குழந்­தைப் பரா­ம­ரிப்­பா­ளர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு வழக்கு விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், குழந்­தைப் பரா­ம­ரிப்­பா­ள­ரான 39 வயது சாடியா ஜமாரி குற்­ற­வாளி என நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. 2016ஆம் ஆண்டு நவம்­பர், டிசம்­பர் ஆகிய மாதங்­களில் வெவ்­வேறு சம்­ப­வங்­களில் அந்த இரண்டு பிஞ்­சுக் குழந்­தை­க­ளுக்­கும் பாதிப்பு விளை­விக்­கும் நோக்­கு­டன் தூக்­க­மின்மை, பதற்­றம் ஆகிய பிரச்­சி­னை­க­ளுக்­கான மருந்தை சாடியா கொடுத்­த­தாக நிரூ­ப­ண­மா­னது.

இதனால் ஐந்து மாதக் குழந்­தை­யும் 11 மாதக் குழந்­தை­யும் பாதிப்­ப­டைந்­தன. இரு குழந்­தை­க­ளுக்­கும் இடையே உறவு ஏதும் இல்லை. குழந்­தை­க­ளின் அடை­யா­ளத்­தைக் காக்க அவற்­றின் பெயர்­க­ளை­யும் அவற்­றின் தாயார்

­க­ளின் பெயர்­க­ளை­யும் வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. தமது ஐந்து வயது மக­ளை­யும் குழந்­தை­யை­யும் பார்த்­துக்­கொள்ள ஆள் தேவை என்று 2016ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் விளம்­ப­ரம் செய்­தி­ருந்­த­தா­கப் பாதிக்­கப்­பட்ட ஐந்து மாதக் குழந்­தை­யின் தாயார் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார். குழந்­தை­க­ளைப் பார்த்­துக்­கொள்ள சாடியா முன்­வந்­த­தாக அவர் தெரி­வித்­தார். சில நாட்­கள் கழித்து தமது குழந்தை அடிக்­கடி அழு­து­கொண்­டி­ருந்­த­தா­க­வும் பால் குடிக்க மறுத்­த­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். இதை­ய­டுத்து, மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­போது விவ­கா­ரம் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

இதற்­கி­டையே, 2016ஆம் ஆண்டு கிறிஸ்­மஸ் தினத்­தன்று தமது குழந்­தை­யை சாடியா பார்த்­துக்­கொண்­ட­தாக பாதிக்­கப்­பட்ட 11 மாதக் குழந்­தை­யின் தாயார் தெரி­வித்­தார். மறு­நாள் குழந்தை வீடு திரும்­பி­ய­போது மயக்­கத்­தில் இருந்­த­தாக அவர் கூறி­னார்.

பதற்­றம் நீங்­கு­வ­தற்­கான மருந்து அக்­கு­ழந்­தைக்­குக் கொடுக்­கப்­பட்­டது தெரி­ய­வந்­தது. அக்­கு­ழந்தை 2017ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் தேதி­யன்று மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வீடு திரும்­பி­யது.