பட்ஜெட் 2020 பற்றுச்சீட்டு திருட்டு: எழுவர் கைது

சிங்­கப்­பூர் எங்­கும் பல வட்­டா­ரங்­களில் கடந்த ஒரு வார­மாக அஞ்­சல்­பெட்­டி­க­ளைச் சேதப்ப­டுத்தி அவற்­றில் இருந்த பட்­ஜெட் 2020 மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஏழு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் நான்கு ஆட­வர்­களும் மூன்று பெண்­களும் அடங்­கு­வர். அவர்­கள் 23 வய­துக்­கும் 54 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள். கைதா­ன­வர்­க­ளி­டையே எவ்­வித தொடர்­பும் இல்லை என்று ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் போலி­சார் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். இது­போன்ற சம்­ப­வங்­கள் மற்ற குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­க­ளி­லும் நிகழ்ந்­தி­ருப்­ப­தாக போலி­சில் புகார் செய்­யப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்த விசா­ர­ணையை போலி­சார் முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.

அஞ்­சல்­பெட்­டி­கள் அரு­கில் சந்­தேக நபர்­க­ளைப் பார்த்­தால் உட­ன­டி­யாக 999 என்ற எண்ணை அழைக்­க­வும் என போலி­சார் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

பட்­ஜெட் 2020 மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்­டு­க­ளுக்­குத் தகுதி பெறு­ப­வர்­கள் அவற்­றைத் தங்­கள் அஞ்­சல்­பெட்­டி­க­ளி­லி­ருந்து கூடிய விரை­வில் எடுத்­து­வி­டும்­படி அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!