தொண்டூழியம்: 31 பேருக்கு விருது வழங்கி சிறப்பிப்பு

1 mins read
eeeebbd4-0863-42aa-b4d5-10022045e423
அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து, சிறப்பு பாராட்டு விருது பெற்ற முகம்மது அஷ்ரத் ஃபவாஷ் முகம்மது அலி, 20, (இடமிருந்து 2வது). கலாசார, சமூக இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் (வலது), என்விபிசி தலைவி திருவாட்டி மில்டிரட் டான் (இடது) ஆகியோர்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 சூழ­லில் மற்­ற­வர்­களுக்கு உத­வி­ய­தற்­காக நேற்று 31 பேர் விருது வழங்கி சிறப்பிக்­கப்­பட்­ட­னர்.

இஸ்­தா­னா­வில் நடந்த இந்த ஆண்­டின் அதி­ப­ரின் தொண்டூழியம் மற்­றும் கொடை­வள்­ளல் விரு­து­களை அதி­பர் ஹலிமா யாக்­கோப் வழங்­கி­னார்.

இந்த ஆண்டு இந்த விருதுக்குச் சாதனை அள­வாக 236 பெயர்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்டு இருந்­தன. நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய அதி­பர், மக்­க­ளின் உதவி மனப்­பான்­மையை, உயர்ந்த உள்­ளத்தை கொவிட்-19 வெளிக்­கொ­ணர்ந்து இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டார்.