சமூகத் தோட்டக்கலை விழா இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை இணையம் வழி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் இணையம் வழி 30க்கும் மேற்பட்ட திட்டங்களில் ஈடுபடலாம்.
காய்கறிகள், பழ மரங்களைப் பயிரிடுவதற்குத் தேவையான திறன்களை ‘எடிபல்ஸ் திட்டம்’ மூலம் கற்றுக்கொள்ளலாம்.
சமூகத் தோட்டக்கலை விழாவுடன் இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து நவம்பர் 1ஆம் தேதி வரை சிங்கப்பூர் பூமலை மரபுடைமை விழா புதிய மெய்நிகர் சுற்றுலாக் களுடன் கொண்டாடப்படும்.
இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை e-Marketplace நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதில் கலந்துகொள்வோருக்கு சிறப்புப் பரிசுகள் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
திட்டத்தில் பங்கெடுக்கும் தாவரப் பண்ணைகளிடமிருந்து தேவையான தோட்டக்கலைப் பொருட்களை வாங்க சிறப்புத் தள்ளுபடிக் குறியீடுகள் வழங்கப்படும்.
பாசிர் பாஞ்சாங் தாவரப் பண்ணையிலிருந்து செடிகளையும் தோட்டக்கலைக்குத் தேவையான பொருட்களையும் வாங்க ஹோர்ட்பார்க்கில் புதிய வர்த்தக இடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.