இவர்களின் எல்லை இல்லா கற்றலுக்கு 'உலக குடிமக்கள் விருது'

இவர்களின் எல்லை இல்லா கற்றலுக்கு 'உலக குடிமக்கள் விருது'

4 mins read
2b633a18-c804-4596-82aa-952b82e0251d
தியா­கே­சன் பூங்­குன்­ற­னார்,தேசிய பல்கலைக்கழகத்தின் குத்துச்சண்டை வீரர் சங்கத்தின் தலைவராக உள்ளார். -
multi-img1 of 2

தற்­போ­தைய கால­கட்­டத்­தின் கலைத்­து­றை­யில் ஏட்­டுக்­கல்­விக் கோட்­பா­டு­க­ளை­விட தரவு ஆய்­வுத் திறன் முக்­கி­யம் என்று கூறு­கி­றார் அரசு நிர்­வா­கக் கல்வி பயி­லும் மாண­வர் தியா­கே­சன் பூங்­குன்­ற­னார், 25.

"ஏட்­டுக்­கல்வி மீது மட்­டும் குறி­யாக இருந்த மாண­வர்­க­ளி­டையே நான் தனித்­துத் திகழ வேண்­டும் என்று நினைத்­தேன்," என்று முதல்­நிலை ஹானர்ஸ் பட்­டம் பெற்ற இவர் கூறு­கி­றார்.

"அரசு நிர்­வா­கத்­தில் பொரு­ளி­யல் துறை­யில் (Political Economy) நிபு­ணத்­து­வம் பெற்­றி­ருக்­கி­றேன். இதில் பொரு­ளி­யல் ஏற்­றத் தாழ்வு, வறுமை போன்ற தலைப்­பு­க­ளைப் பற்றி விரும்பி ஆராய்­வேன்," என்று தியா­கே­சன் கூறி­னார்.

விரும்­பிய துறை­யில் இருந்­த­வாறு கடின திறன்­களை வளர்க்­க­லாம்

தொடக்­கக் கல்­லூ­ரி­யின் முடி­வில் கணக்கு, புள்­ளி­வி­வ­ரம், பொரு­ளி­யல் ஆகிய பாடங்­களில் அதிக ஆர்­வம் இல்­லாத தியா­கே­சன், பேரா­சி­ரி­யர் ஒரு­வ­ரின் ஊக்­கு­விப்­பால் தமது தயக்­கங்­க­ளைப் புறந்­தள்ளி இவற்றை இன்­னும் ஆழ­மா­கப் படிக்­கத் தொடங்­கி­னார்.

"தரவு அறி­வி­யல், நிர­லி­டு­தல் போன்­ற­வற்­றால் மானு­ட­வி­யல் விவ­கா­ரங்­களை நம்­மால் மிக நுட்­ப­மாக ஆராய முடி­யும் என்­பதை எனக்­குச் சுட்­டிக் காட்­டி­ய­வ­ரும் அவரே," என்­றார் அந்த இளை­யர்.

பட்­டப்­ப­டிப்­பின் முதல் இரண்டு ஆண்­டு­களில் சிறப்­பா­கச் செய்து ஓர­ள­வுக்கு சிஏபி புள்­ளி­க­ளைச் சேர்த்த பின்­னர், தியா­கே­சன் தமக்­குப் பழக்­க­மில்­லாத பல்­வேறு பாடங்­க­ளைப் படிக்­கத் தொடங்­கி­னார். 'ஆர்', பைத்­தோன் போன்ற நிர­லி­டு­தல் மொழி­க­ளைச் சுய­மா­கக் கற்­ப­து­டன் புள்­ளி­வி­வர மாதி­ரி­களை (statistical models) உரு­வாக்­க­வும் தியா­கே­சன் பழ­கி­னார்.

"பிற­ருக்­குப் புரி­யும் விவ­ரங்­கள் எனக்கு புரி­யா­மல் இருந்­தால் அது எனக்கு ஒரு­வித அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தும். அந்த உணர்வே எனக்கு மேலும் முனைப்பை அளித்­தது," என்­கி­றார் இவர். இதன் பிறகு, 'ஆர்' நிர­லி­டு­தல் தொடர்­பான பல்­க­லைக்

கழக வேலைக்கு விண்­ணப்­பித்த தியா­கே­ச­னுக்கு இறு­தி­யில் சம்­ப­ளத்­து­டன் கூடிய பகு­தி­நேர வேலை கிடைத்­துள்­ளது.

"எளி­மை­யான குடும்­பத்­தைச் சேர்ந்த எனக்­குக் கைக்­காசு கொடுக்­கும்­அ­வ­சி­யம் என் பெற்­றோ­ருக்கு அப்­போ­தி­ருந்து இல்லை," என்று மகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார்.

எதிர்­பாரா வெளி­நாட்டு வாய்ப்பு

பள்ளி பரி­மாற்­றத் திட்­டத்­தின்­கீழ் இஸ்­ரேல் சென்ற தியா­கே­ச­னுக்­குத் தரவு அறி­வி­யல் வேலைப்­ப­யிற்சி வழங்­கப்­பட்­டது.

"சிங்­கப்­பூ­ரின் போட்­டித்­தன்­மை­மிக்க சூழ­லில் இதே வாய்ப்பு, தொழில்­நுட்­பக் கல்­விப் பின்­னணி இல்­லாத எனக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­குமா என்­பது பெரிய கேள்­விக்­குறி," என்­றார்.

இதன் பிறகு சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சில் பணித்­திட்­டத்தை முடித்த தியா­கே­சன், வாஷிங்­ட­னி­லுள்ள 'போலி­சென்ட்ரி' என்ற அர­சி­யல் ஆய்வு நிறு­வ­னத்­தில் ஆய்­வா­ள­ரா­கப் பணித்­திட்­டம் மேற்­கொள்ள வாய்ப்பு கிடைத்­தது.

"நான் அந்த வேலைக்கு விண்­ணப்­பிக்­க­வில்லை. 'லிங்ட்­இன்' வழி­யாக எனது திறன் மற்­றும் அனு­ப­வங்­களை அறிந்து இந்த வேலை­வாய்ப்பு என்­னைத் தேடி வந்­தது," என்று இவர் கூறு­கி­றார். மேலும் தனக்கு அமைந்த பல வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திப் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் தொடர்­பு­களை உரு­வாக்­கிக் ெகாண்ட தியா­கே­சன், தற்­போது இதே துறை­யில் முது­நி­லைக் கல்வி பயில்­கி­றார்.

தீர்­வு­களை உரு­வாக்க உத­வும் கலை, மானு­ட­வி­யல் திறன்

உல­க­ளா­விய ஆய்­வுத் (Global Studies) துறை­யில் நிபு­ணத்­து­வம் பெற்று தலை­சி­றந்த சாத­னைக்­கான விருதை வென்­றி­ருக்­கும் ஜனனி விஜய், 23, தற்­போது லீ குவான் இயூ பொதுக் கொள்­கைப் பள்­ளி­யில் 'வளர்ந்­து­வ­ரும் தொழில்­நுட்­பங்­கள்' தொடர்­பான திற­னா­ளர் சான்­ற­ளிப்­புக்­காக பயின்று வரு­கி­றார். தொழில்­நுட்ப ஆற்­றல்­க­ளின் ஆழத்­தைப் பற்றி கலை, மானு­ட­வி­யல் மாண­வர்­கள் அறிந்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இருந்­த­போ­தும் சமு­தா­யத்­தின் மீது இத்­த­கைய தொழில்­நுட்­பங்­க­ளின் தாக்­கம் என்ன என்­பதை ஆரா­யக் கலை, மானு­ட­வி­யல் திறன்­கள் கைகொ­டுக்­கும் என்­கி­றார் இவர்.

"தொழில்­நுட்­பத்­தில் ஆர்­வம் கொண்­டுள்ள நாங்­கள், அத­னால் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டால் உரிய திறன்­களை நாட முற்படு­வோம்," என்று கூறு­கி­றார் இவ்­வாண்­டுக்­கான சிண்டா உன்­னத விரு­தின் தலை­சி­றந்த மாண­வ­ரா­கத் (Valedictorian) தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஜனனி.

உல­கின் பிரச்­சி­னை­கள் பன்­மு­கத்­தன்மை வாய்ந்­தவை என்­ப­தால் அவற்­றுக்­கான தீர்­வு­களை உரு­வாக்­கு­வ­தற்­குப் பல துறை­களை உள்­ள­டக்­கிய கல்வி கைகொ­டுக்­கும் என நம்­பு­வ­தாக ஜனனி கூறி­னார். தென்­கி­ழக்­கா­சிய விவ­கா­ரங்­களில் அதிக ஆர்­வம் உள்ள ஜனனி, இவற்­றில் கல்­விச் சமூ­கம் கூடு­தல் கவ­னம் செலுத்­த­லாம் எனக் கரு­து­கி­றார். என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூ­ரில் நிர்­வாக நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றும் ஜனனி, "கற்­றது கைமண்­ண­ளவு, கல்­லா­தது உல­க­ளவு" என்­பதே தமது தாரக மந்­தி­ரம் என்­கி­றார்.

களைத்­துப் போனா­லும் துவண்டு போக­வில்லை

சிங்­கப்­பூர் இளை­யர் படை, இளம் மாற்­றுக் கார­ணி­கள், சிண்டா இளை­யர் பிரிவு உள்­ளிட்ட பல்­வேறு உள்­ளூர் அற அமைப்­பு­க­ளு­டன் இணைந்து செயல்­படும் ஜனனி, வெளி­நாட்டு திட்­டங்­க­ளி­லும் கூட்டு முயற்­சி­க­ளி­லும் இந்த இளம் வய­தி­லேயே அதிக அனு­ப­வம் உள்­ள­வர். 'ஐசெக்' (AIESEC) மன்­றத்­தின் துணைத் தலை­வ­ரா­க­வும் உல­கக் கல்வி மன்­றத்­தின் தலை­வ­ரா­க­வும் இருந்த ஜனனி, அந்­தப் பொறுப்­பில் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் பணித்­திட்­டங்­க­ளுக்­காக ஈடு­பட்­ட­து­டன் சக மாண­வர்­க­ளுக்கு வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்­ளார். நல்ல தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அர்த்­த­முள்ள பணித்­திட்­டங்­களில் முழு­மை­யாக ஈடு­ப­டும்­போது களைப்­பி­லும் உற்­சாக உணர்வு ஏற்­ப­டு­வ­தாக ஜனனி தெரி­வித்­தார். களைப்­பாக இருக்­கும் நேரங்­களில் தான் குடும்­பத்­தா­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் பேசு­வ­தா­கக் கூறும் ஜனனி, தனி­மை­யில் இருக்­கும்­போது தமது நிலை­யைப் பற்றி சுய­மாக ஆராய்­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"முத­லில் என்ன செய்ய வேண்­டும், எதற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும் என்­பது பற்றி தீர யோசிக்க வேண்­டும். நமக்கு நாமே உண்­மை­யாக இருக்­கி­றோமா என்­பதை ஆரா­ய­வேண்­டும்," என்று அவர் தெரி­வித்­தார். 'இல்லை' என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்த தயங்­கக்­கூ­டாது, கொடுக்­கப்­பட்ட பொறுப்­பு­க­ளி­லி­ருந்து பின்­வாங்­கு­வது தவறு என இவர் வலி­யு­றுத்­து­கி­றார்.

விருது குறித்து கருத்­து­கள்

'பத்­துல் இசு­டின் உலக குடி­மக்­கள்' விரு­தைப் பெற்­றுள்ள தியா­கே­ச­னும் ஜன­னி­யும், தங்­க­ளது மகிழ்ச்­சி­யை­யும் நன்­றி­யை­யும் வெளிப்­ப­டுத்­தி­னர். டாக்­டர் முஸ்­தஃபா இந்­தக் கல்வி விரு­துக்­காக 15,000 வெள்­ளியை நன்­கொ­டை­யாக அளித்­தார்.

"முழுக்க முழுக்க திறன் அடிப்­ப­டை­யில் வழங்­கப்­படும் விரு­து­கள் இவை. அதி­லும், இரண்டு இந்­தி­யர்­க­ளுக்கு இந்த விருது கிடைத்­த­தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சிங்­கப்­பூர் தமிழ் சமூ­கத்­தில் இவர்­கள் வருங்­கா­லத் தலை­வர்­க­ளா­கத் திகழ்­வர் என்ற நம்­பிக்கை எனக்கு உண்டு," என்று உறு­தி­ப­டக் கூறி­னார் டாக்­டர் முஸ்­தஃபா.

படங்­கள்: டாக்­டர் முஸ்­தஃபா, பூ.தியா­கே­சன், வி.ஜனனி