அலுவலக இடத்தில் திடீர் சோதனை; 11 ஆடவர்கள் கைது

அங் மோ கியோ­வில் உள்ள தொழிற்­சாலை அலு­வ­லக இடம் ஒன்­றில் போலிஸ் அதி­கா­ரி­கள் கடந்த சனிக்­கி­ழமை திடீர் சோதனை நடத்­தி­னர்.

இதில் சூதாட்­டம் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக 21 வய­துக்­கும் 38 வய­துக்­கும் இடைப்­பட்ட 11 ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அங் மோ கியோ ஸ்தி­ரீட் 64ல் அமைந்­துள்ள அந்த அலு­வ­லக இடம், சூதாட்­டத்­தில் ஈடு­ப­டு­வதற்­கான பதுங்­கு­மி­ட­மாக செயல்­பட்டு வந்­த­தாக போலி­சா­ரின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த அலு­வ­லக இடத்தை 32 வயது ஆட­வர் ஒரு­வர் இயக்கி வந்­த­தா­க­வும் 21 வயது, 38 வய­தில் உள்ள மற்ற இரு ஆட­வர்­கள் அதன் சட்­ட­வி­ரோத செயல்­பா­டு­க­ளுக்­குத் துணை­நின்­ற­தா­க­வும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தச் சூதாட்ட நட­வ­டிக்­கை­களில் வேறு எட்டு ஆட­வர்­களும் பங்­கேற்­றது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக போலிஸ் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

சூதாட்­டத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட சாத­னங்­கள், இரு மேசை­கள், 20 நாற்­கா­லி­கள் ஆகி­ய­வற்றை போலி­சார் பறி­மு­தல் செய்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான போலிஸ் அதி­கா­ரி­க­ளின் விசா­ரணை தொடர்­கிறது. சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் எச்சரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!