அவர் தெம்பனிஸ் ஹப் மையத்தில் வேலை செய்யும் 'ஐஎஸ்எஸ் ஃபெசிலிட்டி சர்வீசஸ்' நிறுவனத்தின் 30 பணியாளர்கள் நேற்றுக் காலை ஒரு மணி நேரத்துக்கு பணி ஓய்வையும் சுவையான காலை உணவையும் பற்றுச்சீட்டையும் பெற்றனர்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'கார்ச்சர்' தெற்காசியா நிறுவனமும் சிங்கப்பூர் சுற்றுச்சூழல் நிர்வாகச் சங்கமும் இணைந்து தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆதரவுடன் சிங்கப்பூரில் பணியாற்றும் 59,000 துப்புரவுப் பணியாளர்களுக்கு தலா $150 பற்றுச்சீட்டுகளை இம்மாத இறுதிக்குள் வழங்கும்.
இந்தப் பற்றுச்சீட்டைக் கொண்டு மளிகைப் பொருட்களுடன் இதர சேவைகளையும் துப்புரவுப் பணியாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். பொதுச் சுகாதார மன்றம் கடந்த மாதம் தொடங்கிய 'சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள்' இயக்கம் தொடர்பான நிகழ்ச்சிகள் இம்மாதம் 31ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறும்.

