சிங்கப்பூர் சொத்துச் சந்தைத் துறையில் சொத்து முகவர்களின் தரநிலையை இணையத்தில் ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை சொத்து முகவர்கள் மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் சொத்து முகவைகளே தரநிலையை நிர்ணயிக்கின்றன.
புதிய வழிகாட்டி நெறிமுறைப்படி அவர்களின் தரநிலை சில முக்கிய அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட உள்ளது. புதிய நெறிமுறைப்படி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக சொத்து முகவர் சேவை வழங்கினாரா என்பது கருத்தில் கொள்ளப்படும். அத்துடன், சொத்து முகவர்கள் வெளிப்படைத்தன்மையுடனும் சொத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் உண்மையுடன் விளக்கி, வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக செயல்பட்டுள்ளனரா என்றும் மதிப்பிடப்படும்.