டின்டர் செயலி வழியாக மற்றொரு பெண்ணைச் சந்தித்த திருமணமான காற்பந்தாட்டக்காரர், அந்தப் பெண்ணின் தோழியை மானபங்கம் செய்தார். இவர் குற்றவாளி என வட்டார நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
2018ல் 38 வயது முகம்மது இம்ரான் சாகிப்பும் அந்த இரண்டு பேரும் கேளிக்கைக் கூடத்தில் சந்தித்து பொழுதைக் கழித்தனர். பின்னர் அந்த டிஆடவர் அந்த இரண்டு பெண்களைத் தமது காரில் அழைத்துச் சென்று இருவரையும் வீட்டில் இறக்கிவிட இருந்தார். மதுமயக்கத்தால் முதல் பெண்ணுக்கு வாந்தி ஏற்பட்ட நேரத்தின்போது இம்ரான் இரண்டாவது பெண்ணைத் தகாத முறையில் தீண்டினார்.
டெம்பனிஸ் ரோவர், ஹோம் யுனைட்டட் ஆகிய காற்பந்து குழுக்களில் விளையாடிய இம்ரான் மீது மானபங்கம் தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 5,000 வெள்ளி பிணையில் வெளிவந்துள்ள அந்த ஆடவருக்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.