ஸாக்கி: வேலையிட பாதுகாப்பை புறக்கணிக்க வேண்டாம்

கொவிட்-19 தொடர்­பான பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களைக் கடைப்­பி­டித்து, நிறு­வ­னங்­கள் மீண்­டும் தங்­கள் பணி­க­ளைத் தொடங்­கி­யுள்­ளன. இருப்­பி­னும், அடிப்­படை வேலை­யி­டப் பாது­காப்பு அம்­சங்­க­ளை­யும் நினை­வில் கொள்­வது அவ­சி­யம் என்­றார் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது.

இவ்­வாண்டு ஜூன் 2 முதல் இது­வரை பத்து வேலை­யிட உயி­ரி­ழப்­பு­கள் பதி­வா­கி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார். அவற்­றில் செப்­டம்­பர் மாதத்­துக்­குப் பிறகு பதி­வா­னவை நான்கு. நான்­குமே அதிக அபா­ய­க­ர­மான பணி­கள் தொடர்­பா­னவை என்­றார்.

வேலை­யிட உயி­ரி­ழப்­பு­க­ளின் எண்­ணிக்கை வழக்­கத்தை விட மிக அதி­க­மாக இல்­லா­விட்­டா­லும், வெகு­நாட்­க­ளாக பணி­களில் ஈடு­படாத ஊழி­யர்­க­ளுக்­குப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் அவ்­வ­ள­வாக பரிச்­ச­ய­மாகி இருக்­காது என்ற அக்­கறை நில­வு­வ­தாக திரு ஸாக்கி குறிப்­பிட்­டார். இழந்த வேலை நேரத்­திற்கு ஈடு­கட்ட வேண்­டும் என்று நிறு­வனங்­கள் அவ­ச­ரப்­ப­ட­லாம். ஆனால் பாது­காப்பு தொடர்­பான கொள்­கை­களை முத­லா­ளி­கள் மீண்­டும் பார்­வை­யிட வேண்­டும் என்­றும் ஊழி­யர்­கள் அவற்­றைப் பழ­கிக்­கொள்­ள­வும் தேவைப்­பட்­டால் அவர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி அளிக்­க­வும் வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­னார் அமைச்­சர்.

‘சைனிஸ் கார்­டன்’ பகு­தி­யில் அமைந்­துள்ள ஒரு கட்­டு­மா­னத் தளத்­திற்­குச் சென்­றி­ருந்த திரு ஸாக்கி இவ்­வாறு பேசி­யி­ருந்­தார். அங்கு நடந்­து­கொண்­டி­ருந்த மேம்­பாட்­டுத் திட்­டத்­திற்­கான பணி­கள், கிருமி முறி­ய­டிப்­புக் கால­கட்­டத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டன.

ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை உறுதி­செய்­வ­தற்­காக திட்­டத்­துக்­குப் பொறுப்­பான நிறு­வ­ன­மான ‘குவான் எய்க் ஹோங் கன்ஸ்ட்­ரக்­‌ஷன்’, பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கண்­கா­ணிக்­கும் கரு­வி­யைப் பயன்­படுத்­தும் திட்­டத்தை அமல்­ப­டுத்­தி­யுள்­ளது. கரு­வி­களை வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­கள், பாது­காப்பு இடை­வெளியை மீறி­னால் அவர்­க­ளது கருவி ஒலி எழுப்­பும். கரு­வி­யோடு இணைக்­கப்­பட்ட செயலி வழி மேற்­பார்­வை­யா­ள­ருக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­படும். இத்­து­டன் நிறு­வ­னத்­தின் 220 ஊழி­யர்­களும் வெவ்­வேறு வேலை­யி­டப் பகு­தி­களில் பணி­யாற்­று­வர். ஒரு பகு­தி­யில் பணி­யாற்­று­ப­வர் வேறு பகு­தி­யில் உள்­ள­வ­ரு­டன் பழக அனு­மதி இல்லை.

திட்­ட­மிட்ட காலத்­திற்­குள் வேலையை முடிப்­ப­தில் ஓர் அவ­ச­ர­நிலை இருந்­தா­லும், பாது­காப்­புக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­தாக நிறு­வ­னத்­தின் பொது மேலா­ளர் ஃபேபியன் லொய் தெரி­வித்­தார்.

கட்­டு­மா­னத் தளத்­தில் மேற்­பார்­வை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டை­யும் என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!