தேசிய அளவில் சிறந்த மாணவப் பேச்சாளர்களை உருவாக்கும் பொருட்டு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நாளை சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இணையம் வழி இளையர் சிறப்பு பட்டி மன்றத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் நடுவராக பொறுப்பேற்று உள்ள இந்த நிகழ்வு, மாணவர்கள் தேசிய அளவில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘கல்வி மேம்பட பெரிதும் உதவுவது வீட்டுச் சூழலா? வெளிச்சூழலா?’ என்ற தலைப்பில் மாணவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.
செல்வி விஷ்ணுவர்தினி, செல்வி ஹரிஷிகா வீட்டுச் சூழலே என்றும் செல்வி ஸ்ரீநிதி, செல்வி சுவேதா வெளிச் சூழலே என்றும் வாதிடவிருக்கிறார்கள். இணையம் வழி நடக்கும் இந்த நிகழ்வுக்கான ஸூம் கூட்ட எண் (Zoom Meeting ID) 870 1481 7296. கடவுச்சொல் தேவையில்லை.
நிகழ்ச்சி தொடர்பான மேற்கொண்ட தகவல்களுக்கு
திரு சையது நிசார் 85034204, திரு நாதன் 98800769,
திரு சரவணன் 97844478 ஆகியோரில் ஒருவரைத் தொடர்புகொள்ளலாம்.