லிட்டில் இந்தியாவில் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் சைக்கிள் ரிக்ஷா சுற்றுலாவும் இடம்பெறுகிறது.
நவம்பர் 13 ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கேம்பல் லேனில் உள்ள இந்திய மரபுடைமை நிலையத்திலிருந்து ரிக்ஷாக்கள் உலாவைத் தொடங்கும்.
அப்துல் கபூர் மசூதி, ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் போன்ற முக்கிய இடங்களை இந்த உலாவில் கண்டு ரசிக்கலாம்.
அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய இந்த ரிக்ஷா சவாரியை இந்திய மரபுடைமை மையம் ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரிக்ஷா பயணம் இடம்பெறும்.
ஒவ்வொரு சவாரியும் 15 நிமிடங்கள் நீடிக்கும். ஒரு ரிக்ஷாவில் இரண்டு பயணிகள் மட்டுமே அமரலாம்.
ரிக்ஷா சவாரிக்கு https://ihc-programmes.peatix.com/view இணையதளத்தில் பதிவு செய்லாம்.