குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், வீட்டில் இருந்து கற்றலில் ஈடுபடுவதற்காக மடக்கக்கூடிய இலவச மேசை, நாற்காலிகளை சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் (சிடிஏசி) வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் வழி 930 குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி செல்லும் பிள்ளைகள் பலனடைவர்.
வீட்டில் தகுந்த கற்றல் சூழல் அமைந்திட இந்த இலவச மேசை, நாற்காலிகள் உதவும் என்றார் கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங்.