'கொவிட்-19 சூழலில் சமூகநல நிறுவனங்களுக்கு முக்கிய பங்குண்டு'

1 mins read
31580a0b-eb38-4e95-829a-0a9a7b21f395
நெருக்­கடி காலத்­தில், குறிப்­பாக தற்­போது அனை­வ­ரை­யும் ஆட்டி வைக்­கும் கொள்ளைநோய் சூழ­லில், எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய பிரி­வி­ன­ருக்கு உத­வு­வ­தில் சமூ­க­நல நிறு­வ­னங்­கள் முக்­கிய பங்­காற்­று­வ­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கூறி­யுள்­ளார். படம்: சாவ்பாவ் -

நெருக்­கடி காலத்­தில், குறிப்­பாக தற்­போது அனை­வ­ரை­யும் ஆட்டி வைக்­கும் கொள்ளைநோய் சூழ­லில், எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய பிரி­வி­ன­ருக்கு உத­வு­வ­தில் சமூ­க­நல நிறு­வ­னங்­கள் முக்­கிய பங்­காற்­று­வ­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கூறி­யுள்­ளார்.

இதற்­காக சிங்­கப்­பூர் சமூ­க­நல நிறு­வன மையத்­தின் 'ஒற்­று­மை­யாக இருங்­கள் மானி­யத் திட்­டம்' மூலம் அர­சாங்­கம் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு 19 சமூ­க­நல நிறு­வ­னங்­களுக்கு நிதி­யா­த­ரவு வழங்­கும்.

மார்ச் மாதத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இந்த மானி­யத் திட்­டம், தகு­தி­பெ­றும் சமூ­க­நல நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் செயல்­பா­டு­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் சமூக இடை­வெ­ளி­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­கான வழி­களை உரு­வாக்­க­வும் கைகொ­டுக்­கும் என்­றார் திரு மச­கோஸ். இந்த மானி­யத் திட்­டத்­தின் வழி இது­வரை எளி­தில் பாதிப்­படை­யக்­கூ­டி­ய­வர்­கள் 83 பேர், தங்­க­ளின் வேலையை இழக்­கா­மல் உதவி பெற்­றுள்­ள­னர் என்று நேற்று நடை­பெற்ற 'ஃபெஸ்டி­வல்­ஃபார்­கூட்2020' நிகழ்­வில் தெரி­வித்­தார் திரு மச­கோஸ்.

"சமூக-பொரு­ளா­தார இணைப்­பில் இயங்­கும் சமூ­க­நல நிறு­வனங்­களால், தற்­கா­லத்­தின் தேவை­களை­யும் சமூக சவால்­க­ளை­யும் சமாளிக்­கும் புத்­தாக்க, நீண்­ட­கா­லத் தீர்­வு­களை உரு­வாக்­க­வும் அள­வி­ட­வும் முடி­யும்," என்­றார் திரு மச­கோஸ். சமூ­க­நல நிறு­வ­னங்­கள் குறித்து அண்­மை­யில் நடத்­தப்­பட்ட பொது­மக்­கள் கருத்­துக் கணிப்­பில் 70 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள், சமூ­க­நல நிறு­வ­னங்­க­ளைப் பற்றி அறிந்­தி­ருந்­தா­லும் அவற்­றி­ட­மி­ருந்து வாங்­கும் பொருட்­க­ளின் விலை­யை­யும் தரத்­தை­யும் மதிப்­பிடு­வ­தில் குறி­யாக உள்­ள­னர் என்று கண்­ட­றி­யப்­பட்­டது.

"சாதிக்க முடிந்த சமூ­க­நல நிறு­வ­னங்­கள், நல்­லது செய்­யும் அதே வேளை­யில் வெற்­றி­க­ர­மாக வியா­பா­ர­மும் நடத்த முடி­யும் என்­ப­தில் பிற­ருக்கு வழி­காட்­ட­லாம்," என்­றார் திரு மச­கோஸ்.