பொதுப் பூங்காக்களில் குடும்பத் தோட்டங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ், மேலும் 1,000 புதிய இடங்களை தேசிய பூங்காக் கழகம் ஒதுக்கித் தரவுள்ளது.
அந்த இடங்கள், பொங்கோல் வாட்டர்வே பாய்ண்ட், சுவா சூ காங் பூங்கா, வெஸ்ட் கோஸ்ட் பூங்கா என இங்குள்ள 18 பூங்காக்களில் ஒதுக்கித் தரப்படும்.
சிங்கப்பூருக்கான சத்துணவுத் தேவைகளில் 30 விழுக்காட்டை 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற விரும்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது கைகொடுக்கும் என்றார் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
“உணவுப் பாதுகாப்பை வலுவடையச் செய்யும் நம் நாட்டின் உத்தியில் ஒரு பகுதி இது. மேலும் சமூக மீ்ள்திறனும் இதனால் மேம்படும்,” என்றார் அவர்.
நிலப்பகுதிகளுடன் பொதுமக்களுக்கு சுமார் 60,000 விதைகளையும் கழகம் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.