வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று முன்தினம் ஜூ கூனில் உள்ள என்டியுசி ஃபேர் பிரைஸ் அமைப்பின் பெனோய் விநியோக நிலையத்துக்கும் கோல்ட் ஸ்ட்ரோரெஜ் அமைப்பின் உறைய வைக்கப்பட்ட இறைச்சி கிடங்குக்கும் வருகை அளித்தார்.
இரு இடங்களுக்கு தாம் மேற்கொண்ட வருகை பற்றி நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த அமைச்சர், "பல்வகைப்படுத்துதல் மற்றும் மேம் படுத்தப்பட்ட கையிருப்பு ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர் விநியோகத் தொடரை வலுப்படுத்த, இரு இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள்," என்றார்.
"உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை அதிகப்படுத்த அதிகாரிகளும் ஊழியர்களும் மேற்கொள்ளும் முயற்சிகளின் மூலம், கொவிட்-19 கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உத்தேச சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.
"இந்த நம்பிக்கையின் காரண மாகத்தான் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது," என்றும் தெரிவித்தார் அமைச்சர் சான்.

