சீன பாரம்பரிய மருத்துவரான ஒரு முதியவர் மருந்தகத்தில் பெண் நோயாளி ஒருவரை மானபங்கம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. லிம் ஆ பா என்ற அந்த 74 வயது மருத்துவர், 2018 செப்டம்பரில் தொடர்ந்து இருமிக் கொண்டு இருந்த ஒரு மாதை குணப்படுத்திவிட்டார். அந்த மாது அடுத்த மாதம் ஆலோசனைக்காக அந்த மருத்துவரை நாடியபோது அவர் அந்த மாதை மானபங்கப் படுத்தியதாக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
தஞ்சோங் பகாரில் செயல்படும் ‘ஸின் ஹுவா டிசிஎம் கிளினிக்’ என்ற தமது மருந்தகத்தில் வேலை பார்க்கும் அந்த மருத்துவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள இரு குற்றச் சாட்டுகளின் பேரில் விசாரணை கோரி இருக்கிறார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாதுக்கு வயது 41. அவர் நிர்வாகியாகப் பணியாற்றுகிறார்.
அந்த மருத்துவர் தன்னிடம் தகாத கேள்விகளை எல்லாம் கேட்டதாகவும் தன்னை மானபங்கம் செய்த தாகவும் அந்த மாது நேற்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். விசாரணை தொடர்கிறது.