தனக்காக மின்தூக்கியைத் திறந்து வைக்காத பெண்ணைத் தாக்கியவருக்கு $3,500 அபராதம்

தனக்காக மின்தூக்கிக் கதவுகளைத் திறந்து வைத்திருக்காத மாது ஒருவரைத் தாக்கிய ஆடவருக்கு நேற்று $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கைத்தடி ஊன்றி நடந்து வந்த 51 வயது சியோ சாய் சின், மின்தூக்கிக் கதவுகளைத் தனக்காக திறந்து வைத்திருக்குமாறு கோரினார். ஆனால் வீவக கட்டடத்தின் மின்தூக்கிக்குள் சென்ற 49 வயது மாது, நான்காவது மாடிக்கான பொத்தானை அழுத்திவிட்டு கதவுகளை மூடிவிட்டார்.

சியோ தன் கைத்தடியைக் கொண்டு கதவுகளை மீண்டும் திறக்கச் செய்து, உள்ளே நுழைந்து 15வது மாடிக்கான பொத்தானை அழுத்தினார்.

கதவைத் தனக்காக ஏன் திறந்து வைத்திருக்கவில்லை என்று மாதை நோக்கி சியோ கேட்க, இருவருக்குமிடையே வாக்குவாதம் தொடங்கியது.

மின்தூக்கி நான்காவது மாடியில் நிறுத்தாமல் சென்றது. 15வது மாடியை அடைந்ததும் சியோ மின்தூக்கியை விட்டு வெளியேறி கதவை மூடவிடாமல், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டதை அடுத்து இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

மாதை சியோ தள்ளியதுடன் அவரின் தலையைப் பலமுறை குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. மாது உதவிக்கு கோரியபோது சியோவின் மனைவியும் மகனும் வந்து இருவரையும் விலக்கிவிட்டனர்.

தாக்கப்பட்ட மாது அவரின் நண்பரை அழைத்ததை அடுத்து போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலால் மாதின் நெற்றிப் பகுதியிலிருந்து புருவம் வரை பெரிய சிராய்ப்புக் காயம் ஏற்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!