சரிபார்த்துக் கணக்கிடத் தவறிய பொறியாளரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது

சரிபார்த்துக் கணக்கிடத் தவறிய பொறியாளரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது

1 mins read
5ba8cacd-cffd-4c48-a06e-186b12859a4e
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தீவு விரை­வுச்­சா­லை­யின் மேம்­பாலத்­தின் நிரந்­த­ரத் தூண்­கள், ஆத­ர­வுக் கட்­ட­மைப்­பு­கள் ஆகி­ய­வற்­றின் திட்­டங்­க­ளைச் சரி­பார்த்­துக் கணக்­கி­டத் தவ­றி­ய­தற்­காக பொறி­யா­ளர் லியோங் சோ ஹோனுக்கு ஆறு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிறைத் தண்­ட­னைக்­குப் பதி­லாக அப­ரா­தம் விதிக்­கக் கோரி மேல்­மு­றை­யீடு செய்­தி­ருந்­தார் 62 வயது லியோங். ஆனால் உயர் நீதி­மன்­றம் அவ­ரின் மேல்­மு­றை­யீட்டை நிரா­க­ரித்­தது.

மேல்­மு­றை­யீட்­டுக்­காக லியோங் நிபு­ணர் அறிக்கை ஒன்றை நீதி­மன்­றத்­தில் சமர்ப்­பித்­தி­ருந்­தார்.

லியோங் சரி­பார்த்­த­தா­கக் கூறப்­படும் திட்­டங்­களில் இருந்த தவறு­களை, சரிவு ஏற்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக மற்­ற­வர்­கள் கண்­டு­பி­டித்­திருக்க வாய்ப்பு இருந்­த­தாக அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்த வாதத்தை நிரா­க­ரித்­த உயர் நீதி­மன்ற நீதி­பதி ஐடிட் அப்­துல்லா, "ஒரு­வர் கண்­டு­பி­டிக்­காத தவ­று­களை மற்­ற­வர்­க­ளா­வது கண்டு­பி­டித்­தி­ருக்­க­லாம் என்று வாதி­டு­வது, நேர்ந்த அபா­ய­க­ர­மான நிலை­யின் கடு­மை­யைக் குறைக்­காது," என்றார். 2017ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி­யன்று விரை­வுச்­சா­லை­யின் தற்­கா­லி­கக் கட்­டமைப்­பு­கள் சரிந்து விழுந்­த­தில் ஊழி­யர் ஒரு­வர் மாண்­ட­து­டன் 10 பேருக்­குக் காயம் ஏற்­பட்­டது. இதன் தொடர்­பில் ஐவர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது.