தம்முடன் வேலை பார்த்த பெண் ஒருவர் குளிப்பதை காணொளி எடுத்த ஆண் தாதிக்கு ஒன்பது வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தப் பெண் தாதி மருத்துவ
மனையில் உள்ள குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் 26 வயது டோனி சியோக் யி தாவ் அவரைக் காணொளி எடுத்தார்.
மருத்துவமனை ஊழியர்கள் ஆடை மாற்றுவதற்கான அறையில் அந்தக் குளியலறை இருக்கிறது. அந்த ஆடை மாற்றும் அறையை ஆண், பெண் ஊழியர்கள் இருசாராரும் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் சியோக்கும் அந்த ஆடை மாற்றும் அறையில் இருந்தனர்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சியோக் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க மருத்துவமனையில் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி பிற்பகல் 1.50 மணி அளவில் இந்தக் குற்றம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண் சியோக்கிற்கு அறிமுகமானவர்.
சியோக் தம்மைக் காணொளி எடுத்துக்கொண்டிருந்தபோது அதை அப்பெண் கவனித்துவிட்டார். காணொளி எடுப்பது யாரெனத் அவருக்குத் தெரியவில்லை. அப்பெண் அலறியதைக் கேட்டு சியோக் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து, அதற்கு முன்பு ஆடை மாற்றும் அறையில் இருந்த பெண் ஊழியருக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பினார். குளியலறையில் சியோக் மட்டுமே இருந்ததாக அந்தச் சக ஊழியர் தெரிவித்தார்.
குற்ற உணர்வு காரணமாக அந்தப் பெண்ணிடம் தமது தவற்றை சியோக் பிறகு ஒப்புக்கொண்டார். அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்ப தற்கு முன்பு தமது கைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்தக் காணொளிகளை அவர் நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
தாம் காணொளி எடுக்கவில்லை என்று அப்பெண்ணிடம் அவர் தெரிவித்தார். ஆனால் அவர் எடுத்த காணொளியில் குளித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் இடது தோள்பட்டை, இடது தொடை, தமது அந்தரங்க உறுப்புகளை அவர் தமது கைகளால் மறைத்திருக்கும் காட்சி இடம்பெற்றிருந்ததாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
சியோக் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தாதிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் மருத்துவமனை கூறியது.