சிங்கப்பூரில் உள்ள 71 பள்ளிவாசல்களில் 40ல் அங்கு தொழுைகக்குச் செல்வோர் ‘டிரேஸ்டுகெதர்’ செயலியைப் பயன்படுத்த முடியும்.
இவ்வாண்டு இறுதிவாக்கில் அனைத்து பொது இடங்களுக்கும் செல்ல விரும்புவோர் இந்தச் செயலியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை வர இருக்கிறது.
இந்நிைலயில், தற்போது பள்ளிவாசல்களில் இதை முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் அறிமுகப்படுத்தியிருப்பது அதற்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது.
டிரேஸ்டுகெதர் செயலி அல்லது அதற்காக வழங்கப்பட்டு உள்ள சாதனப் பயன்பாடு, முதற்கட்டமாக இம்மாதம் 19ஆம் தேதி 24 பள்ளிவாசல்களில் அறிமுகம் கண்டது. பின்னர் இரு நாள்கள் கழித்து அக்டோபர் 23ஆம் தேதியன்று மேலும் 16 பள்ளிவாசல்களில் அது அறிமுகப்படுத்தப்பட்டது.
எஞ்சியுள்ள 31 பள்ளிவாசல்களில் எப்பொழுது முதல் டிரேஸ் டுகெதர் அல்லது சாதனப் பயன்பாடு அறிமுகப்படுத்தப்படும் அல்லது கட்டாயமாக்கப்படும் என்பது குறித்த விவரத்தை முயிஸ் தெரிவிக்கவில்லை.
தற்போதைய நிலையில், பள்ளிவாசல்களுக்குச் செல்வோர் சேஃப் என்ட்ரி பதிவு முறையை அல்லது சிங்பாஸ் கைபேசிச் செயலியை அல்லது அடையாள அட்டையில் உள்ள பட்டைக் குறியீட்டைப் பயன்படுத்திப் பள்ளிவாசல்களுக்குச் செல்லலாம்.
எனினும், பள்ளிவாசல்களுக்கு வருகை தருவோர் இந்தப் புதிய ெசயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த ஊக்குவிக்கும்படி பள்ளிவாசல்களில் பணிபுரிவோரிடம் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய செயலியையோ திரையரங்குகள், உணவகங்கள், வேலையிடங்கள், பள்ளிகள், கடைத்தொகுதிகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்வோர் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கடந்த 20ஆம் தேதி அறிவித்தது.
இதில் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள அல்-ஃபாலா என்ற பள்ளி வாசல் ஒருபடி மேலே சென்று இந்தச் செயலியை பயன்படுத்துவோர் எளிதில் நுழைய வசதியாக சிறப்பு வழித்தடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
“இச்செயலியை பயன்படுத்துவதன் மூலம் பள்ளிவாசலுக்குள் செல்வது எளிதாக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பெரும்பாலானோர் சுற்று வட்டாரத்தில் வேலை பார்ப்பவர்கள். எனவே அவர்களுக்கு நேரம் மிச்சமாவது முக்கியம்.
“இதற்கு முன்னர் நாங்கள் தொழுைகக்கு வருவோரை அடையாள அட்டைக் குறியீட்டை பயன்படுத்தியோ அல்லது சேஃப்என்ட்ரி குறியீட்டு முறையைப் பயன்படுத்தியோ அனுமதித்தோம். அதற்குச் சிறிது நேரம் பிடிக்கும்,” என்று பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் கைருல் அன்வார் விளக்கினார்.
மேலும் இந்தச் செயலியின் மூலம் பள்ளிவாசல்களுக்கு வருவோரின் தொடர்புத் தடங்களை அப்போதைக்கு அப்போது தெரிந்துகொள்ள முடிவதால் வருகைபுரிவோருக்கு கூடுதல் மனநிம்மதியை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.