கொவிட்-19: புதிதாக 4 பேருக்கு பாதிப்பு

கொவிட்-19: புதிதாக 4 பேருக்கு பாதிப்பு

1 mins read
ff0c2d86-4156-443f-87db-38a3c2de2433
-

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, சிங்கப்பூரில் நான்கு புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு அதன் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவரை 58,019ஆக உள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த அந்த நான்கு பேருக்கு, சிங்கப்பூர் வந்த பிறகு, வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு, இன்றிரவு வெளியிடவிருக்கும் செய்தி அறிக்கையில், மேல் விவரங்களைத் தெரிவிக்கும்.