சிங்கப்பூரில் 10 பள்ளிவாசல்களில் முன்னோடித் திட்டமாக நவம்பர் 13ஆம் தேதிமுதல் வெள்ளிக்கிழமை தொழுகைகளில் 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு முடிவில் 250 ஆக்குவது இலக்கு என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நேற்று தெரிவித்தது.
இந்தப் புதிய ஏற்பாடு மூலம் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பிற்பகல் 12.45, பிற்பகல் 1.45, பிற்பகல் 2.45 ஆகிய மூன்று நேரங்களில் 750 பேர் தொழலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த 10 பள்ளிவாசல்களும் தீவு முழுவதும் உள்ளன. தொழுகைக்குச் செல்வோர் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் மூன்று பிரிவுகளாக அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவிலும் 50 பேர் வரை அனுமதி உண்டு.
அந்த 10 பள்ளிவாசல்களிலும் தொழுகைக்குச் செல்பவர்கள் டிரேஸ்டுகெதர் செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தச் சாதனங்கள் அக்டோபர் 23 முதல் சிங்கப்பூரில் உள்ள 71 பள்ளிவாசல்களில் 40ல் கிடைக்கின்றன.

