தரவு விதிமீறல்களுக்கு கடுமையான அபராதங்கள்

தரவு விதிமீறல்களுக்கு கடுமையான அபராதங்கள்

2 mins read
90e6f2b8-1c60-4a02-aa1a-6093bca4f65f
-

தரவு விதி­மீ­றல்­க­ளைப் புரி­யும் நிறு­வ­னங்­கள் கடு­மை­யான அப­ரா­தங்­களை எதிர்­நோக்­கும் அதே­வே­ளை­யில், புத்­தாக்­கத்­துக்கு அவை தனி­ந­பர் தரவை பயன்­ப­டுத்­து­வ­தற்கு, சிங்­கப்­பூர் தனி­ந­பர் தக­வல் பாது­காப்­புச் சட்­டத்­தில் நேற்று திருத்­தங்­கள் செய்­யப்­பட்ட பிறகு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

பய­னீட்­டா­ளர்­க­ளின் நம்­ப­கத்­தன்­மையை உயர்­வாக வைத்­தி­ருப்­ப­தற்­கும் புத்­தா­கத்­துக்­காக தரவை பயன்­ப­டுத்­து­வ­தற்­கும் இடையே உள்ள பதற்­றத்­தைப் பற்றி எடுத்­து­ரைத்­தார் தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் (படம்).

அதன் தொடர்­பி­லான விவா­தத்­தில் 13 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பங்­கேற்­ற­னர்.

"தங்­கள் தனிப்­பட்ட தக­வல்­கள் பாது­காப்­பான முறை­யில் பயன்­படுத்­தப்­ப­டு­கின்­றன என்ற நம்­பிக்­கை­யைப் பய­னீட்­டா­ளர்­கள் பெற வேண்­டும். நிறு­வ­னங்­களும் தங்­கள் பய­னீட்­டா­ளர்­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­களை சட்­ட­பூர்­வ­மான தேவை­க­ளுக்கு மட்­டுமே, அதற்­கு­ரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைக் கடைப்­பி­டித்து பயன்­ப­டுத்த வேண்­டும். இந்­தச் சட்­டத் திருத்­தங்­கள் ஒரு சம­நி­லையை ஏற்படுத்தும்," என்று அமைச்­சர் விவ­ரித்­தார்.

மசோ­தா­வில் செய்­யப்­பட்­டி­ருக்­கும் முக்­கிய மாற்­றம் என்­ன­வென்­றால், தரவு விதி­மீ­ற­லால் தண்­டிக்­கப்­படும் நிறு­வ­னம், சிங்­கப்­பூ­ரில் அதன் ஆண்டு மொத்த வரு­மா­னத்­தில் 10% அல்­லது $1 மில்­லி­யன், அதில் எது அதி­க­மாக உள்­ளதோ, அந்­தத் தொகையை அது அப­ரா­த­மாக செலுத்த வேண்­டும்.

தற்­போது, தரவு விதி­மீ­ற­லால் தண்­டிக்­கப்­படும் நிறு­வ­னத்­துக்கு அதி­க­பட்­ச­மாக $1 மில்­லி­யன் அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­கிறது.

தரவு விதி­மீ­றல் நிக­ழு­மா­னால் சம்­பந்­தப்­பட்ட அந்த நிறு­வ­னமோ அமைப்போ, தனி­ந­பர் தக­வல் பாது­காப்பு ஆணை­யத்­தி­ட­மும் பாதிக்­கப்­பட்ட தனி­ந­பர்­க­ளி­ட­மும் அது பற்றி தெரி­விக்க வேண்­டும்.

"சட்­டத் திருத்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கடு­மை­யான அப­ரா­தம், நமது அண்டை நாடு­க­ளின் சட்­டத்­தைக் காட்­டி­லும் கடு­மை­யாக இருக்­கிறது என்ற எண்­ணத்தை ஏற்­ப­டுத்­தாதா? அத­னால், சிங்­கப்­பூ­ரில் தளம் அமைக்க எண்­ணும் நிறு­வ­னங்­கள் தங்­கள் திட்­டத்தை மாற்­றிக்­கொள்ள வழி ஏற்­ப­டுமா," என்று தெம்­ப­னிஸ் குழுத் தொகுதி உறுப்­பி­னர் டெஸ்­மண்ட் சூ கேள்வி எழுப்­பி­னார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு ஈஸ்­வ­ரன், "தரவு விதி­மீ­ற­லின் கடு­மை­யைப் பொறுத்தே அப­ரா­தங்­கள் விதிக்­கப்­படும் என்­பதை மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன். சட்­டத்­தில் செய்­யப்­பட்­டுள்ள திருத்­தங்­கள் சட்­டம் அம­லுக்கு வந்த ஓராண்­டுக்­குப் பிற­கு­தான் நடை­மு­றைக்கு வரும்," என்­றும் விளக்­கி­னார்.

இந்­தத் திருத்­தச் சட்­டத்­தில் உள்ள புதிய அம்­சம் பற்­றி­யும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

ஒரு புதிய பயன்­பாட்­டுக்­குத் தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தரவு பயன்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கிறது என்று நிறு­வ­னம் அவர்­க­ளி­டம் தெரி­விக்க வேண்­டும். அவர்­கள் அதற்கு மறுப்பு தெரி­விக்க நிறு­வ­னம் அவர்­க­ளுக்கு கால அவ­கா­சம் கொடுக்க வேண்­டும் என்பதே அந்தப் புதிய அம்சம்.

குறிப்புச் சொற்கள்