பற்றுச்சீட்டுகள் திருட்டு தொடர்பில் 55 பேர் கைது

பற்றுச்சீட்டுகள் திருட்டு தொடர்பில் 55 பேர் கைது

1 mins read
92656c33-7ad2-4cfa-83cb-f5bcd3862928
சாவ் பாவ் கோப்புப்படம் -

பட்­ஜெட் 2020 தொடர்­பில் வழங்­கப்­பட்ட மளி­கைப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்­கான பற்­றுச்­சீட்­டு­கள் அதற்­குத் தகுதி பெற்­ற­வர்­க­ளின் வீவக அடுக்­கு­மாடி வீட்டு அஞ்­சல் பெட்­டி­களில் போடப்­பட்­டன.

அந்­தப் பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­ய­தன் தொடர்­பில் இது­வரை 55 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று நிதி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­ற­வர்­கள் பெரும்­பா­லும் 55 அல்­லது அந்த வய­தைக் கடந்த முதி­ய­வர்­கள் என்­றும் கூறிய அமைச்­சர், இந்த வய­தி­ன­ரி­டையே மின்­னி­லக்க அறி­வாற்­றல் வளர்ந்து வரும் வேளை­யில், அர­சாங்­கம் இனி மின்­னி­லக்க பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கக்­கூ­டும் என்­றும் சொன்­னார்.

வசதி குறைந்த சிங்­கப்­பூ­ரர் களுக்கு வீட்­டுச் செல­வு­களில் உத­வும் வகை­யில் மளி­கைப் பொருட்­கள் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

தலா $150 மதிப்­புள்ள 150,000 தொகுப்பு பற்­றுச்­சீட்­டு­கள் தகுதி பெற்ற சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு பதிவு செய்­யப்­பட்ட தபா­லில் கடந்த மாதம் அனுப்பி வைக்­கப்­பட்­டன.

அவற்­றில் 229 தொகுப்பு பற்­றுச்­சீட்­டு­கள் திரு­டப்­பட்­டன. அது மொத்த பற்­றுச்­சீட்­டுத் தொகுப்­பு­களில் 0.2%.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­குள் எவ்­வித தொடர்­பும் இல்லை என்­றும் போலிஸ் விசா­ர­ணை­யில் தெரியவந்துள்ளது.

சிலர் தங்­கள் அஞ்­சல் பெட்டி­களைப் பூட்­டா­மல் வைத்­தி­ருந்­தது திருட்­டுச் செயல்களுக்கு ஒரு கார­ண­மாக இருந்­தது என்­றும் அமைச்சர் குமாரி இந்­தி­ராணி விளக்­கி­னார்.