சான்: கல்வித் துறை சூழலுக்கு ஏற்ப மாற்றம் காண வேண்டும்

சான்: கல்வித் துறை சூழலுக்கு ஏற்ப மாற்றம் காண வேண்டும்

3 mins read
071e94f4-bc27-443d-8574-638f6d709dbc
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் கல்­வித் துறை நன்­மதிப்­பைப் பெற்­ற­தாக இருக்­க­லாம், ஆனால் உலகச் சந்­தை­யில் தொடர்ந்து இதே வேகத்­தில் முன்­னேற வேண்­டும் என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

ஆரம்­ப­கால குழந்­தைப் பருவ மேம்­பாட்டு தேசி­யக் கல்­விக் கழ­கத்­தின் வகுப்­ப­றைக்கு நேற்று மெய்­நி­க­ரில் வருகை மேற்­கொண்ட திரு சான் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது இத­னைக் கூறி­னார்.

இந்­தத் துறை­யில் பயிற்­சி­யும் கல்­வி­யும் எவ்­வாறு வழங்­கப்­படு கின்றன என்­பதை மறு­ஆய்வு செய்ய ஏராளமான வாய்ப்­பு­கள் உள் ­ளன என்ற அமைச்­சர், தொடர்ந்து போட்­டித்­தன்­மை­யு­டன் திகழ பரி­ணாம வளர்ச்சி தேவை­யென்­றார்.

அதற்கு கல்­வித்­து­றை­க்கு நான்கு பரந்த அள­வி­லான மாற்­றங்­களை அவர் முன்­வைத்­தார்.

முத­லா­வது, கற்­றலை ஒரு­வ­ரது வாழ்க்­கை­யின் முதல் 15 -20 ஆண்­டு­க­ளுக்­குள் மட்­டுமே கட்­டுப்­படுத்த முடி­யாது.

"இனி­ கற்றல் என்பது, கட்­டா­யக் கல்­வி பற்­றி­யது மட்டுமல்ல, தொடர் கல்­வி­யைப் பற்­றி­ய­தாகவும் இருக்­கும்," என்ற திரு சான், வயது வந்­தோ­ருக்கு கற்­பிப்­ப­தற்­கான புதிய வழி­களை சிங்­கப்­பூர் கண்­ட­றிய வேண்­டும். இது நாட்­டிற்கு முக்­கி­ய­மான துறை­யாக உருவாகி வரும் என்­றார்.

இரண்­டா­வது, கற்­ற­லா­னது நேர­டி­யாக மட்­டு­மின்றி, இணை­யம் வழி­யா­க­வும் எப்­படி அமை­கிறது என்­பதை கொவிட்-19 சூழல் விளக்­கி­யுள்­ளது. "இந்த இரு கற்­பித்­தல் முறை­க­ளி­லும் நன்­மை­கள் உள்­ளன. இரண்டு முறை­க­ளை­யும் இணைத்து, மாண­வர்­கள் சிறந்த பய­னைப் பெறு­வதை உறுதி செய்­வதே சவால்," என்று அவர் மேலும் கூறி­னார்.

மூன்­றா­வ­தாக, பள்­ளி­களும் நிறு­வ­னங்­களும் அதி­க­ள­வில் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும்.

ஏனெ­னில் கற்­றல் என்­பது பள்­ளி­கள், உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­குள் மட்­டுமே அடங்­கி­ய­தல்ல.தற்­போது, அதி­க­மான பாடத்­திட்­டங்­கள், குறிப்­பாக வயது வந்­தோ­ருக்­கான படிப்­பு­கள், வகுப்­ப­றைக் கற்­ற­லு­டன் வேலைப் பயிற்­சி­யும் இணைக்­கப்­பட்­ட­ ஒன்றாக இருப்­ப­தைக் காண­லாம்.

இறு­தி­யாக, ஒரு பாடத்­தில் மட்­டுமே நிபு­ணத்­து­வம் பெற்­றி­ருப்­பது போதாது என்று அமைச்­சர் சான் குறிப்­பிட்­டார்.

"நிச்­ச­ய­மாக, ஆழ­மான அறி­வைப் பெற வேண்­டும், ஆனால் இன்று, எங்­கள் மக்­க­ளுக்கு துணைத் திறன்­களை அளிக்க வேண்­டும். எனவே, வேலை தேடு­பவர்­கள் தொழில்­து­றைக்கு மிக­வும் ஈர்ப்புடைய­வர்­க­ளாக இருப்­பார்­கள்," என்­றார் அமைச்­சர்.

முறை­யான பள்ளி முறைக்கு அப்­பால் சிங்­கப்­பூ­ரில் உள்ள பல கல்வி, பயிற்சி நிறு­வ­னங்­கள் இந்த மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப தங்­க­ளைத் தக­வ­மைத்­துக் கொண்­டுள்­ளன என்று திரு சான் கூறி­னார்.

"அவற்­றில் பல சிங்­கப்­பூ­ருக்கு அப்­பால், 'சிங்­கப்­பூர்' சின்­னத்­தைப் பயன்­ப­டுத்தி மிக­வும் நெரி­ச­லான, அனைத்­து­லகச் சந்­தை­யில் போட்­டி­யி­டு­கின்றன," என்­றார் அவர்.

கல்­வித்­து­றை­யில் தொடர்ந்து தனது முத்­தி­ரை­யைப் பதிக்க சிங்­கப்­பூ­ரி­டம் "தேவை­யான வளங்­கள்" உள்­ளன. இவை குடி­ய­ர­சின் தரத்­தை­யும் அதன் கற்­றல், பயிற்சி அமைப்­பில் மக்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கை­யை­யும் குறிக்­கின்­றன என்­றார் அமைச்­சர் சான்.

மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் சுல்­கி­ஃப்லி ஆகி­யோர் வாராந்­திர வேலை­வாய்ப்பு அறிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக, ஆரம்­ப­கால குழந்­தைப் பருவ கல்­வித் துறை­யில் உள்ள வேலை வாய்ப்­பு­கள் குறித்து பகிர்ந்­து­கொண்­ட­னர்.

இந்­தத் துறை சிறப்­பாக செய­லாற்­று­வ­தா­க­வும், கொவிட் -19 நெருக்­க­டி­ நிலையிலும் மேலும் வளர்ந்து வரு­வ­தா­க­வும் இரு மச­கோஸ் கூறி­னார்.

ஏறக்­கு­றைய 180,000 சிறார்­கள் இன்று ஆரம்­ப­கால குழந்­தைப் பருவ கல்­வி­யில் சேர்க்­கப்­ப­டு­கி­றார்­கள், 2023 வாக்­கில் இது 200,000 ஆக உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத்­துறை, 21,000 பாலர்­பள்ளி ஆசி­ரி­யர்­களை வேலைக்கு அமர்த்­தி­யுள்­ளது, என்­றும் மேலும் ஆள்­சேர்ப்பு நடை­பெற்று வரு­கிறது.

"ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தேவை தொடர்ந்து ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தால், கடந்த மூன்று ஆண்டு­களில் கிட்­டத்­தட்ட 17% அதி­கரிப்­பு­டன் சம்­பள உயர்­வு­களும் சிறப்­பாக உள்­ளன," என்றார் அமைச்சர்.