வேலை இழப்பால் அவதியுறும் குடும்பங்களுக்கு $4 மி. நிதி

வேலை இழப்பால் அவதியுறும் குடும்பங்களுக்கு $4 மி. நிதி

2 mins read
c0454f25-7ce8-4743-bfa5-4ab4e0ea2525
துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட்­டும் ஐந்து மாவட்ட மேயர்­களும் இணைந்து நீ ஆன் கொங்சி-சமூக மேம்­பாட்டு மன்ற கொவிட்-19 நிவா­ரண நிதியை நேற்று தொடங்கி வைத்­த­னர். படம்: COMMUNITY DEVELOPMENT COUNCILS AND THE NGEE ANN KONGSI -

கொவிட்-19 சூழ­லால் வேலை­யின்றி இருப்­ப­வர்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு உதவ $4 மில்­லி­யன் மதிப்­பி­லான புதிய நிதி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தகு­தி­பெ­றும் ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் $500 தொகை ஒரு­முறை வழங்­கப்­படும்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட்­டும் ஐந்து மாவட்ட மேயர்­களும் இணைந்து நீ ஆன் கொங்சி-சமூக மேம்­பாட்டு மன்ற கொவிட்-19 நிவா­ரண நிதியை நேற்று தொடங்கி வைத்­த­னர்.

லாப நோக்­க­மற்ற அமைப்­பான நீ ஆன் கொங்­சி­யின் தலை­வர் திரு ஜேமி டியோ, மேயர்­க­ளி­டம் $2 மில்­லி­யன் காசோ­லையை வழங்­கி­னார். அது­போக, மேற்­கூ­றப்­பட்ட இந்த நிதிக்கு $2 மில்­லி­யன் வழங்க சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் உறுதி­பூண்­டுள்­ள­ன.

இந்த நிதிக்­குத் தகு­தி­பெற, 21 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­க­ளா­க­வும் அவர்­கள் தற்­போது வேலை­ இன்றியும் இருக்க வேண்­டும். மேலும், குறைந்­தது மூன்று மாதங்­க­ளாக அவர்­கள் கட்­டாய விடுப்­பில் இருக்­கவோ அல்­லது ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­கி­யி­ருக்­கவோ வேண்­டும்.

இந்த நிதிக்­குத் தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்­களை அடை­யா­ளம் காண, இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து சமூ­கப் பங்­கா­ளித்­துவ அமைப்­பு­க­ளு­டன் இணைந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் பணி­யாற்­றும்.

நேற்­றைய நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய துணைப் பிர­த­மர் ஹெங், கொவிட்-19 சூழ­லில் ஊழி­யர்­கள், வர்த்­த­கங்­கள், குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க கிட்­டத்­தட்ட $100 பில்­லி­யனை அர­சாங்­கம் ஒதுக்­கி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"என்­றா­லும், சிங்­கப்­பூ­ரர்­கள் சில­ரும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரும் தனிப்­பட்ட சூழ்­நி­லையை அல்­லது அவ­ச­ர­நி­லையை எதிர்­நோக்கு­கின்­ற­னர்.

"அத்­த­கை­யோ­ருக்கு உதவ, நமது தேசிய அள­வி­லான முயற்­சி­க­ளுக்கு சமு­தா­யத்­தின் பல­த­ரப்­புக்­கும் கைகொ­டுக்க முன்­வ­ர­லாம்," என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு, குறிப்­பாக எளி­தில் பாதிப்­புக்கு ஆளா­கக்­கூடி­ய­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க கூடு­த­லான நிறு­வ­னங்­கள், சமூ­கப் பங்­கா­ளித்­துவ அமைப்­பு­கள், தனி­நபர்­கள் முன்­வ­ரு­மாறு திரு ஹெங் கேட்­டுக்­கொண்­டார்.

வேலை­யி­ழந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கைதூக்­கி­விட சமூ­கப் பிணைப்­பு­க­ளின் வலி­மையை இந்த நிதி எடுத்­துக்­காட்­டு­வ­தாக தென்­மேற்கு மாவட்ட மேய­ரும் மேயர்­கள் குழுத் தலை­வ­ரு­மான திரு­மதி லோ யென் லிங் சொன்­னார்.

நீ ஆன் கொங்சி அமைப்­பின் தலை­வர் திரு ஜேமி டியோ, "தற்­போ­தைய சிர­ம­மான சூழ­லில், நம்­மில் பலர் இது­வரை இல்­லாத அளவு ஏரா­ள­மான சவால்­களை எதிர்­கொண்டு வரு­கி­றோம். இந்த நிலை­யில், சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­விக்­கரம் நாங்­கள் விரும்­பு­கி­றோம்," என்­றார்.

குறிப்புச் சொற்கள்