மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சிக்கு மூவகை உத்தி

மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சிக்கு மூவகை உத்தி

2 mins read
ca477ff2-9851-4ee0-992f-2d2b6ceb4e78
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம். -

மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லின் அடுத்த கட்ட வளர்ச்­சிக்கு சிங்­கப்­பூர் தயா­ராக வேண்­டும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்துள்ளார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்­குப் பிறகு நாட்­டின் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் வலி­மை­யு­டன் இருக்க இது வகை செய்­யும் என்­றார் அவர்.

இதற்­கான மூவகை உத்­தியை அவர் நேற்று மேற்­கோள் காட்டி கைபேசி கட்­ட­மைப்­புத் துறை­யின் மெய்­நி­கர் நிகழ்­வில் பேசி­னார். மின்­னி­லக்க உள்­கட்­ட­மைப்­பில் முத­லீடு செய்­வது, தடை­யின்றி தரவுக­ளைப் பெற அனைத்­து­லக நிர்­வா­கக் கட்­ட­மைப்பை அமைப்­பது, மக்­கள் மற்­றும் நிறு­வ­னங்­க­ளின் மின்­னி­லக்­கத் திறனை மேம்­ப­டுத்­து­வது ஆகி­யவை மூலம் வலு­வான அடித்­த­ளத்தை அமைப்­பது ஓர் உத்­தி­யா­கும்.

"மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரு­கிறது. அதில் ஏற்­படும் மாற்­றங்­களை நாம் மிகுந்த ஆர்­வத்­து­டன், உன்னிப்பாகக் கவ­னித்து வர வேண்­டும். இதற்கேற்ப, நாடு தழு­விய பாது­காப்­பான, மீள்­தி­றன்­மிக்க 5ஜி தொடர்­புக் கட்­ட­மைப்­பில் சிங்­கப்­பூர் முத­லீடு செய்­கிறது," என்­றார் திரு ஈஸ்­வ­ரன். 5ஜி புத்­தாக்­கத்­தைத் தொடங்க $40 மில்­லி­யன் வழங்­கு­வ­தாக அர­சாங்­கம் கடந்த ஆண்டு உறுதி அளித்­தது.

இவ்­வாண்டு இறு­திக்­குள் 5ஜி நிபு­ணத்­து­வம் தொடர்­பாக 1,000 வேலை­கள் உரு­வாக்­கப்­படும்.

கடந்த செப்­டம்­பர் மாதம் தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் கைபேசி கட்­ட­மைப்பு நிறு­வ­னங்­களும் இணைந்து அறி­வித்த திட்­டம் வாயி­லாக இந்த வேலை­கள் உரு­வாக்­கப்­படும்.

5ஜி கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­வது மட்­டு­மின்றி செயற்கை நுண்­ண­றிவு, இண்­டர்­நெட் ஆஃப் திங்ஸ் ஆகி­ய­வற்­றி­லும் சிங்­கப்­பூர் அதன் ஆற்­றலை மேம்­ப­டுத்தி வரு­வ­தாக அமைச்­சர் ஈஸ்­வ­ரன் விவ­ரித்­தார்.

"செயற்கை நுண்­ண­றிவு, இண்­டர்­நெட் ஆஃப் திங்ஸ் ஆகிய வளர்ந்­து­வ­ரும் தொழில்­நுட்­பங்கள் மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்­தக்­கூ­டி­யவை. அவற்­றால் உற்­பத்­தித் திறனை மேம்­ப­டுத்­த­வும் வளர்ச்­சிக்­கான புதிய பாதை­களை அமைக்­க­வும் முடி­யும்," என்று திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

"அது­மட்­டு­மல்­லாது, அனைத்­து­லக வர்த்­த­கம் தொடர்ந்து செழிப்­பு­டன் இருக்­க­வும் உல­க­ளா­விய நிலை­யில் மக்­கள் தொடர்ந்து தொடர்­பில் இருக்­க­வும் தர­வு­கள் தடை­யின்றிக் கிடைப்­பதை சிங்­கப்­பூர் உறுதி செய்ய வேண்­டும்," என்­றார் அவர். உதா­ர­ணத்­துக்கு, மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் ஒப்­பந்­தங்­க­ளின் முன்­னோ­டி­யாக சிங்­கப்­பூர் திகழ்­கிறது. இது­வரை நியூ­

சி­லாந்து, சிலி, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளு­டன் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் ஒப்­பந்­தங்­களில் சிங்­கப்­பூர் கையெ­ழுத்­திட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக தென்­கொ­ரி­யா­வு­ட­னும் சிங்­கப்­பூர் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

"மின்­னி­லக்க உலகை நோக்கி நாம் செல்­லும் அதே வேளை­யில் மின்­னி­லக்­கத் திறன் கொண்­ட­வர்­க­ளுக்­கும் அது­கு­றித்து அவ்­வ­ள­வாக தெரி­யா­த­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான இடை­வெ­ளிக்கு எதி­ராக நாம் செயல்­பட வேண்­டும். நமது பொரு­ளி­ய­லும் சமு­தா­ய­மும் மின்­னி­லக்க உரு­மாற்­றத்தை எதிர் கொள்ளும் வேளை­யில் யாரை­யும் நாம் ஆத­ர­வின்றி விட்­டு­வி­டக்­

கூ­டாது. அனைவ­ரையும் உள்ள டக்கிய சமூ­தா­யத்தை உறுதி செய்ய வேண்­டும்," என்றார் திரு ஈஸ்வரன்.