பழைய கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையில் 44 ஆண்டுகள் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் யிவோன் மார்ஜோரி செல்மோன் கடந்த மாதம் 28ஆம் தேதியன்று காலமானார்.
அவருக்கு வயது 94.
இவர் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையில் ஆக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்.
அதுமட்டுமல்லாது, 1961ஆம் ஆண்டில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கும் அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் முதல்முறையாக நடத்தப்பட்டது.
அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த பெருமை டாக்டர் செல்மோனைச் சேரும். டாக்டர் செல்மோன் 1996ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

