தந்தை கொலை: மகனைத் தடுத்துவைக்க உத்தரவு

தந்தை கொலை: மகனைத் தடுத்துவைக்க உத்தரவு

1 mins read
0bffd046-faa2-4e7c-b413-f0f0a828a924
-

மன­நிலை சரி­யில்­லாத 46 வயது ஆட­வர் ஒரு­வ­ரைக் குறிப்­பிட்ட கால வரம்பு இன்றி தடுத்து வைக்­கும்­படி உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. அந்த ஆட­வர் தன்­னு­டைய 75 வயது தந்தையைக் கொலை செய்­து­விட்­ட­தாக உயர் நீதி­மன்ற விசா­ரணை ஒன்­றில் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

டான் கோக் மெங் என்ற அந்த ஆட­வர், 2015 நவம்­பர் 13 ஆம் தேதி, பிடோக் நார்த்­தில் இருக்­கும் தங்­கள் அடுக்­கு­மாடி வீட்­டில் தன் தந்­தை­யு­டன் மூன்று மணி நேரம் தனித்து விடப்­பட்­டார்.

அப்­போது அவர் தன் தந்­தை­யைக் கொன்­று­விட்­டார்.

டான் அந்­தக் குற்­றச்­செ­யலை செய்து இருக்­கி­றார் என்­றா­லும் மன­நிலை கோளாறு கார­ண­மாக கொலைக் குற்­றச்­சாட்­டில் இருந்து அவர் விடு­விக்­கப்­பட்­டார்.

டான், மன­நல நிலை­யங்­களில், சிறை­யில் அல்­லது பாது­காப்பு உள்ள இதர இடங்­களில் தனி­மை­யில் வைக்­கப்­ப­டு­வார்.

இதற்­குக் குறிப்­பிட்ட கால வரம்பு எது­வும் இல்லை. காலக்­கி­ரம முறைப்­படி அவ­ரின் மன­நிலை சோதிக்­கப்­படும். விடு­தலை செய்ய பொருத்­த­மானவர் என்று தெரி­ய­வ­ரும்­போது சட்­டம் அவரை விடு­விக்­கும். கொலைச் சம்­ப­வம் நிகழ்ந்­ததை அடுத்து மருத்­து­வர்­களும் போலி­சா­ரும் டானின் வீட்­டுக்­குச் சென்­ற­னர். ஒன்­றுக்­குமே உதவாத மகன் என்று தன் தந்தை தன்­னைத் திட்­டி­ய­தா­க­வும்

அத­னால் தனக்­கும் தன் தந்­தைக்­கும் இடை­யில் உறவு சரி­யில்லை என்­றும் டான் அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­னார்.