கொவிட்-19க்கு எதிராக மேலும் ஓர் ஆயுதம்: முன்னோட்டத் திட்டத்தில் வெற்றி

2 mins read
bf1e730a-13d0-4589-81b5-b5e003327730
ஆயிரக்கணக்கானோரின் அளவீடுகளைப் புதிய செயல்முறை தொகுத்துத் திரையில் காட்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரத்­தத்­தில் உள்ள உயிர்­வ­ளி­யின் (ஆக்­ஸி­ஜன்) அள­வைக் கண்­காணிக்­கும் தானி­யங்கி கம்­பி­யில்லா செயல்­மு­றை­யின் முன்­னோட்­டத் திட்­டம் வெற்­றி­க­ர­மாக நடந்து முடிந்­துள்­ளது. கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் சிங்­கப்­பூ­ரின் புதிய ஆயு­த­மாக இது­வும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

ரத்­தத்­தில் குறைந்த அளவு உயிர்­வளி இருப்­பது, கொவிட்-19 அறி­கு­றி­யாக இருக்­க­லாம்.'புளூ­டூத்' அம்­ச­முள்ள நாடித்­து­டிப்பு ஆக்­சி­மீட்­டர்­களை இப்­பு­திய செயல்­முறை பயன்­ப­டுத்தி ரத்­தத்­தின் உயிர்­வளி அள­வு­க­ளைக் கண்­ட­றி­யும்.

கையால் செய்­வ­ன­வற்றை இச்­செ­யல்­முறை தானி­யக்க முறை­யாக மாற்ற உத­வு­கிறது. மேலும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோ­ரின் நாடித்­து­டிப்பு ஆக்­சி­மீட்­டர் அள­வீ­டு­களை ஒருங்­கி­ணைத்­துக் காண்­பிக்­கிறது.

தங்­கும் விடு­தி­களில் வசிக்­கும் ஊழி­யர்­கள் தங்­க­ளின் ஆக்­சி­மீட்­டர் அள­வீ­டு­க­ளைத் தின­மும் இரண்டு முறை பதிவு செய்ய வேண்­டும். புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களை அடை­யா­ளங்­கா­ணும் முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று. தற்­போது இச்­செ­யல்­முறை தானி­யக்க முறை­யில் செய்­யப்­ப­டு­வ­தில்லை. ஆனால் புதிய செயல்­முறை மூலம், ஊழி­யர்­கள் தங்­க­ளின் ஆள்­காட்டி விர­லில் 'புளூ­டூத்' கொண்ட நாடித்­து­டிப்பு ஆக்­சி­மீட்­ட­ரைப் பொருத்தி, 30 வினா­டி­களில் ரத்­தத்­தின் உயிர்­வளி அள­வைப் பதிவு செய்­து­வி­ட­லாம்.

இவ்­வாறு பெறப்­படும் அள­வீ­டு­கள், பின்­னர் நிறத்­தின் அடிப்­ப­டை­யில் பிரிக்­கப்­படும். ரத்­தத்­தி­லுள்ள உயிர்­வளி, இத­யத் துடிப்பு ஆகி­ய­வற்­றின் அள­வீ­டு­கள் வழக்­க­நி­லை­யில் இருந்­தால் பச்சை நிறம் காட்­டும். ஏதோ ஓர் அள­வீடு வழக்­க­நி­லை­யில் இல்­லை­யெ­னில், ஆரஞ்சு நிறம் காட்­டப்­படும். இரண்டு அள­வீ­டு­களும் வழக்­கத்­திற்கு மாறாக இருந்­தால் சிவப்பு நிறம் காட்­டும்.

மேலும், அள­வீ­டு­கள் குறித்த தக­வல்­கள் அவ­ர­வர் கைபே­சிக்­குக் குறுந்­த­க­வ­லாக அனுப்­பப்­படும். இத்­த­க­வல்­களை ஆங்­கி­லம், தமிழ், சீனம், வங்­கா­ளம், இந்தி ஆகிய மொழி­களில் பெற்­றுக்­கொள்ள தேர்வு­செய்­யும் அம்­ச­மும் உள்­ளது.

இப்­பு­திய செயல்­மு­றையை சமூக பரா­ம­ரிப்பு வளா­கங்­க­ளி­லும் பயன்­படுத்­த­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இரண்டு மாத முன்­னோட்­டத் திட்­டத்­தில் 24 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பங்­கேற்­ற­னர். முடி­வில், ஊழி­யர்­களை வெற்­றி­க­ர­மா­கக் கண்­கா­ணிக்­க­லாம் என்று தெரிய வந்­தது. தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை, சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­றின் மருத்­து­வர்­க­ளு­டன் கலந்­தா­லோசித்த சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் ஆய்­வுக் குழு, இவ்­வாண்டு ஏப்­ரல் முதல் ஜூன் வரை இப்­பு­திய செயல்­மு­றையை உரு­வாக்­கும் பணி­களில் ஈடு­பட்­டது. இத்­திட்­டத்­திற்கு தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் தேசிய ஆய்வு அற­நி­று­வ­ன­மும் ஆத­ர­வ­ளித்­தன.