'நிதி தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள் பொதிந்துள்ளன'

'நிதி தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள் பொதிந்துள்ளன'

2 mins read
a4071a40-7269-452f-a2b3-26816b60ceaf
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் நிதி தொழில்­நுட்­பத் துறை வளர்ச்சி காணும் என்­றும் கூடு­தல் வேலை வாய்ப்­பு­கள் அத­னால் ஏற்­படும் என்­றும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் கூறி­யுள்­ளார்.

கொவிட்-19 சூழ­லி­லும் சாத்­தி­ய­மா­கக்­கூ­டிய பல்­வேறு புதிய வாய்ப்­பு­கள் இத்­து­றை­யில் உள்­ள­தாக அவர் இணை­யம் வழி நேற்று நடை­பெற்ற 'மின்­னி­லக்க வங்­கிப் பரி­வர்த்­த­னைக் கருத்­த­ரங்­கில்' தெரி­வித்­தார்.

"கொவிட்-19 சூழ­லின் முரண் என்­ன­வென்­றால், சிறிய நிறு­வனங்­களும் பெரிய நிறு­வ­னங்­களும் தொழில்­நுட்­பத்தை ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய கட்­டா­யத்­தில் விடப்­பட்­டன.

"மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தால் வரும் வாய்ப்­பு­களை அறிந்து புதிய சந்­தை­க­ளுக்­குள் நிறு­வ­னங்­கள் கால்­வைக்க வைத்­து­விட்­டது. சாதா­ரண சில்­லறை வர்த்­த­கக் கடை­கள்­கூட இணை­யம் வழி தங்­க­ளின் பொருட்­களை விற்­கத் தொடங்­கி­விட்­டன," என்­றார் அவர்.

நிதித் துறை சார்ந்த தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் தொடர்ந்து தங்­க­ளின் வியா­பா­ரத்­தை­யும் ஊழி­ய­ர­ணி­யை­யும் விரி­வு­ப­டுத்தி வரு­வ­தாக சிங்­கப்­பூர் நிதி தொழில்­நுட்ப சங்­கத்­தின் முன்­னோட்ட ஆய்வு முடி­வு­கள் கூறு­கின்­றன என்று திரு இங் சுட்­டி­னார்.

"சிங்­கப்­பூ­ரின் நிதிச் சேவைத் துறைக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் ஒரு புதிய சகாப்­தமே தொடங்­கி­யுள்­ளது. சவால்­களும் வாய்ப்­பு­களும் கூடி வரும் உற்­சா­கக் கால­கட்­டம்," என்­றார் அவர்.

நாள­டை­வில் நேர­டி­யா­கச் செல்­லக்­கூ­டிய வங்­கி­கள் குறைந்து, கூடு­தல் மின்­னி­லக்க வங்­கி­கள் உரு­வா­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். இது வேலை­கள், ஊழி­யர்­கள் மீது பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம் என்­றும் சொன்­னார்.

அத­னால், நிதித்­துறை நிபு­ணர்­கள் தங்­க­ளின் திறனை மேலும் மேம்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றும் மின்­னி­லக்­கத் திறன்­கள், தர­வுப் பகுப்­பாய்வு அம்­சங்­களில் நிபு­ணத்­து­வத்தை அதி­க­ரித்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தங்­க­ளின் ஊழி­ய­ர­ணி­யில் முத­லீடு செய்­ய­வும் முத­லா­ளி­களுக்கு அறி­வு­றுத்­தி­னார்.

முடிந்­தால், வேலை­களை மாற்றி­ய­மைத்து தேவை ஏற்­ப­டின் ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்கு­மா­றும் கேட்­டுக்­கொண்­டார்.

"மேம்­பட்ட திறன்­கள் தேவைப்­படும் பொறுப்­பு­களை ஏற்­கும் தகுதி ஊழி­யர்­க­ளி­டம் இருந்­தால், அனை­வ­ருக்­கும் பலன் அளிக்­கும் ஒரு சூழ்­நி­லை­யாக இது அமை­யும். ஊதி­யம் அதி­க­ரிக்­கும், சமூக­ந­ல­னும் அதி­க­ரிக்­கும்," என்று குறிப்­பிட்­டார் திரு இங்.