சிங்கப்பூரில் மேலும் எழுவருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் புதிய தொற்று சம்பவம் இல்லை

சிங்கப்பூரில் மேலும் எழுவருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் புதிய தொற்று சம்பவம் இல்லை

1 mins read
12c739bd-b458-423e-a84d-5247c8515c6c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 4) நண்பகல் நிலவரப்படி புதிதாக 7 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,036 ஆகியுள்ளது.

இன்று பதிவான தொற்றுச் சம்பவங்களில் இரண்டு விடுதிகளில் பதிவானவை. உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

கூடுதல் விவரங்களை சுகாதார அமைச்சு பின்னர் அறிவிக்கும்.