சிங்கப்பூரின் குற்றவியல் நீதி துறையில் உள்ள குறைபாடுகளைச் சமாளிக்க இருமுனை அணுகுமுறையை பின்பற்றுமாறு பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். இதில் ஓர் அம்சம் சமரச அபராதம், பிணைத் தொகை, வாக்குமூலம் பெறுவது, பயிற்சி, குற்றச் செயலுக்கு இலக்கானோரின் நிலைமை முதலானவை இவற்றில் அடங்கும். இவற்றை அரசாங்கம் நேரடியாக கையாளலாம் என்றால் தனியார் துறை வழக்கறிஞரான திருவாட்டி லிம்.
மற்றது, அரசு மற்றும் அரசமைப்பு சட்ட விவகாரங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் தொடர்பானவை. இதற்கு உயர் நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட ஆணையம் ஒன்றை அமைக்கலாம் என்றார் அவர்.
முன்னாள் பணிப்பெண் பார்தி லியானி வழக்கு காரணமாக எழுந்த பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு தாக்கல் செய்திருந்த தீர்மானத்தில் அல்ஜுனிட்-ஹவ்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி லிம் பேசினார்.

