நாணய ஆணையத்தின் அமலாக்க நடவடிக்கைகளால் 9 குற்றவாளிகள் சிக்கினர்; $15 மி. தண்டத்தொகை விதிப்பு

நாணய ஆணையத்தின் அமலாக்க நடவடிக்கைகளால் 9 குற்றவாளிகள் சிக்கினர்; $15 மி. தண்டத்தொகை விதிப்பு

2 mins read

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நிதித்­துறை சார்ந்த சிக்­க­லான முறை­கே­டு­க­ளைக் கண்­ட­றிந்து துடைத்­தொ­ழிக்க அதன் அம­லாக்­கப் பிரிவை நவீன தொழில்­நுட்ப உத­வி­யு­டன் வலுப்­ப­டுத்­தும் பணி தொட­ரும் என்று கூறி­யுள்­ளது.

இந்த ஆண்டு ஜூன் வரை 18 மாதங்­களில் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் மேற்­கொண்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­யில் குற்­ற­வி­யல் சார்ந்த ஒன்­பது குற்­றங்­க­ளைக் கண்­டு­பி­டித்து அதற்­காக $11.7 மில்­லி­யன் தண்­டத்­தொ­கை­யும் வசூல் செய்­துள்­ளது. பண­மோ­சடி தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை மீறி­ய­தற்­காக தண்­டத்­தொ­கை­யு­டன் சேர்த்து ஆணை­யம், $3.3 மில்­லியன் அப­ரா­தம் வசூ­லித்­தது.

தகு­தி­யற்ற அல்­லது அங்­கீ­காரம் பெறாத நிதி கையா­ளு­நர்­கள் 25 பேருக்­குத் தடை விதித்­த­தாக ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட தனது அம­லாக்க அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

இது­போன்ற குற்­றங்­கள் குறித்து நடத்­தப்­படும் விசா­ர­ணைக்­கும் ஆய்­வுக்­கும் வழக்­க­மாக 33 மாதங்­கள் ஆகும். பின்­னர் அது 24 மாதங்­களா­கக் குறைக்­கப்­பட்­டது.

அது­போல தண்­டத்­தொகை வழக்­கு­கள் குறித்த விசா­ர­ணைக்­கும் 30 மாதங்­கள் வேண்­டி­யி­ருந்­தது. அது­வும் 26 மாதங்­க­ளாக குறைக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில் அண்­மைய வழக்­கு­களை ஆணை­யம் 18 மாதங்­களில் முடித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

வளர்ந்­து­வ­ரும் சிங்­கப்­பூர் நிதித்­து­றை­யின் நம்­ப­கத்­தன்­மை­யை­யும் அதன் நற்­பெ­ய­ரை­யும் தொடர்ந்து கட்­டிக்­காப்­ப­தற்கு ஆணை­யம் அதன் அம­லாக்க நட­வ­டிக்­கை­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது என ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் குமாரி பெக்கி பாவ் கூறி­னார்.

நிதித்­துறை சார்ந்த முறை­கேடு­களைத் தடுத்­து­நி­றுத்தி பய­னீட்­டா­ள­ரைப் பாது­காப்­ப­தோடு முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் நம்­பிக்­கை­அளிக்க வேண்­டும். அதற்கு கடு­மை­யான அம­லாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது அவ­சி­யம் என்­றும் குமாரி பெக்கி கூறி­னார்.

தலை­மைச்­சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­து­டன் இணைந்து செயல்­பட்­ட­தன் கார­ண­மா­கவே குற்­றங்­களை வெற்­றி­க­ர­மாக அடை­யா­ளம் காண முடிந்­தது என்று அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும், வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப்­பி­ரிவு, கணக்கு வைப்பு மற்­றும் நிறு­வன ஒழுங்­கு­முறை ஆணை­யம், லஞ்ச ஊழல் ஒழிப்பு புல­னாய்­வுத்­துறை ஆகிய அர­சாங்க அமைப்பு­க­ளு­ட­னும் இணைந்து ஆணை­யம் செயல்­பட்­டது.

"எங்­க­ளு­டன் இணைந்து செயல்­பட்ட இந்த அமைப்­பு­கள் பல சிக்­க­லான வழக்­கு­கள் குறித்து விசா­ரணை மேற்­கொண்டு ஆய்­வு­செய்­யும் பணி­களில் உத­வின," என்­றார் குமாரி பெக்கி.

நிதித்­துறை சார்ந்த முறை­கேடு­களை தடுத்து நிறுத்­தும் வகை­யில் வெளி­நாட்டு அர­சாங்­கங்­க­ளின் நிதித்­துறை ஆணை­யங்­க­ளு­டன் நெருக்­க­மாக இணைந்து செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார். நிதித்­து­றை­யில் தந்­தி­ர­மா­கக் கையா­ளப்­படும் சிக்­க­லான முறை­கே­டு­க­ளை­யும் குற்­றங்­க­ளை­யும் ஒழிக்க நவீன தொழில்­நுட்ப உத­வி­யு­டன் ஆணை­யம் அதன் அம­லாக்­கப் பிரி­வின் செயல்­தி­றனை செம்­மைப்­ப­டுத்­தும் பணி­கள் தொட­ரும் என்­றும் குமாரி பெக்கி கூறி­னார்.