இவ்வாண்டு சிறிய நிறுவனங்கள் மேலும் எளிதாக வரிகளைத் தாக்கல் செய்ய முடியும். சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நேற்று வெளியிட்ட புது ஏற்பாட்டின் மூலம் இது சாத்தியமாகும்.
Form C-S (Lite) எனும் மேலும் எளிமையாக்கப்பட்ட வரி படிவம், அந்த ஏற்பாட்டின் புதிய அம்சங்களில் ஒன்று. நிறுவனங்களின் கணக்கியல் மென்பொருள் மூலம் நிறுவன வரியை நேரடியாக தாக்கல் செய்ய வகைசெய்யும் முறை மற்றோர் அம்சம்.
நிறுவனங்களுக்கான மின்னிலக்கக் குறிப்பீடுகளை ஆணையம் வழங்கவிருக்கிறது. இவ்வாண்டு ஏறத்தாழ 60,000 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இந்தப் புதிய படிவத்தைப் பயன்படுத்தி பயனடையலாம்.
$200,000 அல்லது அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனம் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு வேறு சில தகுதிக்கூறுகளும் பொருந்தும். வரி தொடர்பான கூடுதலான நடைமுறைகள் மின்னிலக்கமயமாகி வரும் தற்போதைய சூழலில், நிறுவனங்கள் 'பே நாவ் கியூஆர்' குறியீட்டைக் கொண்டு வரியைத் தாக்கல் செய்யலாம். தாங்கள் செலுத்த வேண்டிய தொகை குறித்த ஆக அண்மைய விவரங்களை அவை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். வரியைத் தாக்கல் செய்வது தொடர்பான குறிப்பீடுகளை உள்நாட்டு வருவாய் ஆணையம் கட்டங்கட்டமாகக் குறைக்க முனைகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு குறிப்பீடுகளில் பெரும்பாலானவை மின்னிலக்கமயமாக்கப்படலாம்.

