அமெரிக்கா பிளவுபட்டால் உலகப் பொருளியலுக்கு ஆபத்து: சான் சுன் சிங்

அமெரிக்கா பிளவுபட்டால் உலகப் பொருளியலுக்கு ஆபத்து: சான் சுன் சிங்

2 mins read
9cfe34d0-4a23-4eee-985a-c467b212046e
படம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த நியூயார்க் போலிஸ் துறை. படம்: ராய்ட்டர்ஸ் -

அமெ­ரிக்­கா­வில் வாக்­குப் பதிவு முடிந்து நேற்­றுக் காலை வரை முடி­வு­கள் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இத­னால் அடுத்த அதி­பர் யார் என்­ப­தில் தொடர்ந்து இழு­பறி நீடித்­தது.

இந்த நிலை­யில் அமெ­ரிக்­கா­வின் அதி­ப­ராக யார் வந்­தா­லும் தேர்­த­லால் பிள­வு­பட்­டுள்ள நாட்டை ஒருங்­கி­ணைக்க வேண்­டும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுங் சிங் கேட்­டுக்கொண்­டார்.

உல­க­ம­ய­மாக்­குதல், மின்­னி­லக்­க­ ம­யம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான சவால்­களை சமா­ளிக்க நாட்­டின் ஒற்­றுமை அவ­சி­யம்.

இல்­லை­யென்­றால் பொரு­ளி­ய­லில் பின்­ன­டைவு ஏற்­பட்டு ஒட்டுமொத்த உல­கப் பொரு­ளி­யலுக்கு பாதிப்பு ஏற்படும்.

இத்­த­கைய மாற்­றம் ஏற்­ப­டா­விட்­டால் உல­க­ம­ய­மாக்­குதலில் சரிவு ஏற்­பட்டு உல­கப் பொரு­ளி­ய­லின் அமைப்­பும் முறிந்­து­வி­டும் என்று அவர் எச்சரித்தார்.

"ஒத்த கருத்­து­டைய நாடு­களை ஒன்று சேர்த்து உல­கில் தனது தலை­மையை எப்­படி தக்கவைத்துக் கொள்­வது என்­பதே அமெ­ரிக்கா முன்­னே­றிச் செல்­வ­தற்­கான முக்­கிய சவால்­களில் ஒன்று.

"இதன் மூலமே உல­கப் பொரு­ளி­யலை நில­வ­ரத்­துக்கு ஏற்ப வைத்­தி­ருக்க முடி­யும்," என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் வெற்றி பெறத் தேவை­யான 270 தேர்­தல் சபை வாக்­கு­களை ஜன­நா­ய­கக் கட்சி அதி­பர் வேட்­பா­ளர் ஜோ பைடன் நெருங்கி வந்த சம­யத்­தில் அமைச்­சர் சான் தனது கருத்தை வெளி­யிட்­டார்.

தற்­போ­தைய அதி­ப­ரான டோனல்ட் டிரம்ப், முடி­வு­களை ஏற்றுக்கொள்­ளா­மல் பல மாநி­லங்­களில் மீண்­டும் வாக்­கு­களை எண்ண வேண்­டும் என்று அறை­கூ­வல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் அமெ­ரிக்கா ஏறக்­கு­றைய இரண்­டா­கப் பிள­வு­பட்­டுள்­ளதை தேர்­தல் சபை வாக்கு­ கள் காட்­டு­வ­தாக புளூம்­பர்க்குக்கு அளித்த பேட்­டி­யில் அமைச்­சர் சான் குறிப்பிட்டார்.

அமெ­ரிக்க தேர்­தல் மட்­டு­மல்­லா­மல் வெளி­நா­டு­களில் கொவிட்-19 மீண்­டும் தலை தூக்­கு­வ­தால் சிங்­கப்­பூர் பாதிக்­கப்­ப­டு­கிறது.

வர்த்­த­கத்தைச் சார்ந்­துள்ள சிங்­கப்­பூ­ரும் அடுத்­த­டுத்த முடக்­கத் தை­யும் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கிறது என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வெளியிட்ட மதிப்­பீட்டை சுட்­டிக்­காட்­டிய அவர், சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் படிப்­ப­டி­யா­க ஏற்ற இறக்கமாக மீட்­சி­ய­டை­யும் என்­றார்.

சீனா, கிரு­மித்­தொற்­றில் இருந்து மீண்டு வரு­வது உல­கப்­பொ­ரு­ளி­ய­லுக்கு ஆறு­த­லாக இருந்­தா­லும் சீனா மட்­டுமே உல­கப் பொரு­ளி­ய­லில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது என்று அமைச்­சர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்