இவ்வாண்டு மரினா பேயில் வாணவேடிக்கை இல்லை

2 mins read
42d15f2f-70e7-40e2-8cc9-1f13053f04e9
மரினா பே வட்­டா­ரத்­தில் இவ்­வாண்டு புத்­தாண்டை வர­வேற்­கும் வாண வேடிக்கை இருக்­காது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மரினா பே வட்­டா­ரத்­தில் இவ்­வாண்டு புத்­தாண்டை வர­வேற்­கும் வாண வேடிக்கை இருக்­காது.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக பெரு­ம­ள­வில் கூட்­டம் கூடு­வ­தைத் தவிர்ப்­ப­தற்­காக நகர மறுசீர­மைப்பு ஆணை­யம் இந்த ­மு­டிவை எடுத்­துள்­ளது.

இதற்­குப் பதி­லாக தீவு முழு­வ­தும் உள்ள குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் வாண­வே­டிக்­கை­கள் நடை­பெ­றும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

"பொது­மக்­க­ளின் சுகா­தா­ரத்­துக்­கும் பாது­காப்­புக்­கும் முன்­னு­ரி­மை­ய­ளிக்க விரும்­பு­கி­றோம். அதே சம­யத்­தில் புத்­தாண்டை மக்­கள் பாது­காப்­பா­க­வும் அர்த்­த­முள்­ள­தா­க­வும் கொண்­டாட மாறு­பட்ட வகை­யில் ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளோம்," என்று ஆணை­யத்­தின் தலைமை நிர்­வாகி லிம் எங் ஹுவி சொன்­னார்.

மரினா பேயில் வாண­வே­டிக்­கை­க­ளுக்­குப் பதி­லாக இரண்டு ஒளிக்கற்றைக் காட்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன.

முதல் காட்சி, பல்­வேறு கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் கலைப்­ப­டைப்­பு­கள் அலங்­க­ரிக்­கும்.

தேசிய தொண்­டூ­ழி­யர், கொடை யாளர் நிலை­யத்­து­டன் கூட்டு சேர்ந்து இந்­தக் காட்சி நடத்­தப்­ப­டு­கிறது. இதை­யொட்டி வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இடங்­க­ளான சிங்­கப்­பூர் ஃபுல்லர்ட்­டன் ஹோட்­டல், கலை அறி­வி­யல் அருங்­காட்­சி­ய­கம், மெர்­ல­யன் ஆகி­யவை டிசம்­பர் 25 முதல் 31 வரை ஒளி­யூட்டப்படும்.

இரண்­டா­வது காட்சி, மரினா பே ஆகா­ய­வெ­ளியை ஒளி­யூட்­டும் வகை­யில் 60 ஒளிக்­கற்­றை­கள் பாய்ச்­சப்­படும்.

இதனை டிசம்­பர் மாதம் முழு­வ­தும் காண முடி­யும். இந்த இரு காட்­சி­களும் கொள்ளை நோயி­லி­ருந்து மீண்டு வரு­வ­தை­யும் புதிய ஆண்­டில் ஒரே நாடாக வலு­வு­டன் மீள்­வ­தை­யும் பிர­தி­ ப­லிக்­கும் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

புத்­தாண்­டின் முந்­தைய நாள் இர­வில் மீடி­யா­கார்ப் நிறு­வ­னத்­தின் இசை நிகழ்ச்­சி­களும் நடை­பெ­று­கிறது.

இதில் உள்­ளூர், அனைத்­து­லகக் கலை­ஞர்­கள் பங்­கேற்­க ­வி­ருக்­கின்­ற­னர்.

மரினா பே வட்­டார ஒளி­யூட்­டல் மற்­றும் குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளின் வாண­வே­டிக்கை காட்­சி­களை உள்­ள­டக்­கிய இந்த இசை நிகழ்ச்சி ஒளி­வழி 5ல் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பு செய்யப்படும்.