முன்னாள் மூத்த அமைச்சர்: நீதித்துறை சுதந்திரம் முக்கியம்

முன்னாள் மூத்த அமைச்சர்: நீதித்துறை சுதந்திரம் முக்கியம்

2 mins read
72ad8e69-248a-453c-8268-9672732c943a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் நீதித்­துறை சுதந்­தி­ர­மாகத் தொடர்ந்து இருந்து வர­வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று பேரா­சி­ரி­யர் ஜெய­கு­மார் தெரி­வித்து இருக்­கி­றார்.

நீதித்­து­றை­யு­டன் கூடிய தங்­கள் தொடர்­பு­களில் அமைச்­சர்­களும் அதி­கா­ரி­களும் முறை தவ­றா­மல் நடந்து கொள்­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தில் சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­மர் லீ குவான் இயூ­வும் மற்ற பிர­த­மர்­களும் மிக­வும் கவ­ன­மாக இருந்து வந்­துள்­ள­னர் என்றார் அவர்.

பேரா­சி­ரி­யர் ஜெய­கு­மார் எழு­திய 'ஆளுமை: ஒரு சிங்­கப்­பூர் கண்­ணோட்­டம்' என்ற புத்­த­கம் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

வெளியீட்டு நிகழ்ச்­சி­யில் பார்தி லியானி என்ற பணிப்­பெண் வழக்கு விவ­கா­ரம் தொடர்­பி­லான கேள்விக்­குப் பதி­ல­ளித்த போது அவர் இவ்வாறு குறிப்­பிட்­டார்.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­க­மும் இதை தெளி­வு படுத்தி இருக்­கி­றார் என்­றார் அவர்.

பணிப்­பெண் மீது வழக்­குத் தொடுக்க அர­சி­னர் தரப்­புக்கு நல்ல முகாந்­தி­ரம் இருந்­தது என்­பதை அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்த வழக்­கில் முர­ணற்ற ஆதிக்­கம் எது­வும் இல்லை என்­பதற்குப் போதிய தக­வல்­க­ளை­யும் திரு சண்­மு­கம் தெரி­வித்து இருந்­தார். முறை­யற்ற ஆதிக்­கம் இருந்­த­தாக தாங்­கள் கூற­வில்லை என்று எதிர்த்­த­ரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உறு­திப்­ப­டுத்தி இருப்ப தாகவும் அவர் குறிப்­பிட்­டார்.

பேரா­சி­ரி­யர் ஜெய­கு­மார் எழுதி இருக்­கும் 192 பக்க புத்­த­கத்தை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் வெளி­யிட்டு உள்­ளது. அதை $35 விலைக்கு முன்­னணி புத்­த­கக் கடை­களில் வாங்­க­லாம்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் இணைய புத்­த­கக் கடை­யில் இப்­போது அந்­தப் புத்­த­கம் கிடைக்­கும்.

போஃமா சட்­டம் பற்றி கருத்து கூறிய அவர், சிங்­கப்­பூ­ரர்­கள் எப்­போ­துமே தாமாக விழிப்­பு­நி­லை­யில் இருந்து வர­வேண்­டும் என்­ப­து­தான் உண்­மை­யான பாது­காப்பு என்­றார்.

பிர­த­மர் லீ சியன் லூங் குடும்ப சச்­ச­ரவு பற்றி கருத்­து­ரைத்த பேரா­சி­ரி­யர், தங்­க­ளின் செய்­கை­கள் பிர­த­ம­ரின் நற்­பெ­யரை மட்­டு­மின்றி சிங்­கப்­பூ­ரின் நற்­பெ­ய­ரை­யும் பாதித்து­வி­டும் என்­பதை பிர­த­மரின் உடன்­பி­றப்­பு­கள் தெரிந்­து­கொண்­டி­ருக்க வேண்­டும் என்­றும் பிர­த­ம­ரின் உடன்­பி­றப்­பு­கள் பிர­த­மர் மீது குறை­கூ­றி­யது தமக்கு திகைப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டதாகவும் கூறினார்.

சிங்­கப்­பூர் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்த்­த­ரப்பு உறுப்­பி­னர்­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்து இருப்­பது பற்றி புத்­தக வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் கருத்து கூறிய பேரா­சி­ரி­யர், வரும் 10 ஆண்­டு­களில் சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கக்­கூ­டிய சாத்­தி­ய­மான அர­சி­யல் சூழல்­க­ளைச் சுட்­டி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் தொடர்ந்து மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்­மை­யு­டன் வலு­வான மசெக அர­சாங்­கம் அமையலாம்.

மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்மை பெறாத, இருந்­தா­லும் மன்­றத்­தில் சாத­க­மான அள­வுக்கு பெரும்­பான்மை பெற்­றி­ருக்­கின்ற மசெக அர­சாங்­கம்; ஒரு சில இடங்­களை அதி­க­மாகக் கைப்­பற்றி மசெக அல்­லது மசெக சாராத அர­சாங்­கம் மாறி மாறி ஆட்­சிக்கு வரு­வது;

வலு­வான பெரும்­பான்­மை­யு­டன் கூடிய இடங்­க­ளைக் கைப்­பற்றி மசெக அல்­லாத அர­சாங்­கம் வலு­வாக அரி­யணை ஏறு­வது ஆகியவை அந்­தச் சாத்­தி­ய­மான அர­சி­யல் நில­வ­ரங்­கள் என்று அவர் குறிப்­பிட்­டார். தமது புத்தகத்தில் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்ற இதர விவகாரங்கள் பற்றி யும் பேராசிரியர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.