சிங்கப்பூரில் ராபின்சன்ஸ் நிறுவனம் தனது இரு கிளைகளையும் மூடவிருப்பதால் அதன் தொடர்பிலான சிறப்பு விற்பனை நேற்று தொடங்கியது.
அதன் இரு கிளைகள் ‘த ஹீரன்’, ‘ராஃபிள்ஸ் சிட்டி’ கடைத் தொகுதி ஆகிய இடங்களில் உள்ளன. அங்குள்ள ஆடை அலங்காரம், அழகுப் பொருட்கள், இல்லத்தில் பயன்படுத்தும் பொருட்கள், பயணத்துக்கான பொருட்கள் என அனைத்தும் கழிவு விலையில் விற்கப்படுகின்றன,
“எல்லா பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, கழிவு விலையில் பொருட்களை வாங்கிச் செல்லுங்கள்,” என்று ராபின்சன்ஸ் நிறுவனத்தின் விற்பனை விளம்பரத்துக்குப் பொறுப்பு வகிக்கும் பி.டபிள்யூ.பி குழுமம் தெரிவித்தது.