சாங்கி விமான நிலையம் 3வது முனைய பணியாளர்கள் 5,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை நிறைவு

சாங்கி விமான நிலையம் மூன்றாவது முனையத்தில் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 5,000க்கும் அதிகமான பணியாளர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என சுகாதார அமைச்சு நேற்று (நவம்பர் 6) தெரிவித்தது.

முனையம் 3ல் பயணிகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய பணியாளர்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அக்டோபர் மாதம் 24ஆம் தேதி சுகாதார அமைச்சு அறிவித்தது.

அங்கு பணிபுரிந்த ஒரு பாதுகாவல் அதிகாரி, அங்குள்ள ராபிள்ஸ் மருத்துவமனையின் கொவிட்-19 பரிசோதனை உதவியாளர் ஆகியோருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த அறிவிப்பை அமைச்சு வெளியிட்டிருந்தது.

முனையம் 3ல் மொத்தம் 5,084 பணியாளர்களுக்கு இது வரை கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; யாருக்கும் தொற்று இல்லை.

எஞ்சியிருக்கும் 33 பேருக்கு தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை அவர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்வதன் தொடர்பில் சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து அமைச்சு செயல்படுகிறது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!